இந்த காகிதத்தில் நீங்கள் எதை எழுதினாலும் அது உடனே நடக்கும். மனதில் நினைத்த காரியத்தில் வெற்றி பெற இது போதும்.

amman5
- Advertisement -

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஏனென்றால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் நாம் எது நடக்க வேண்டும் என்று நினைத்துகின்றோமோ, அது நடக்கவே நடக்காது. எது நடக்கக்கூடாது என்று நினைக்கின்றோமோ, அது உடனே நடந்து விடும். காரணம் நடக்கும் என்ற நம்பிக்கையை விட, நம்முடைய மனதில், நடக்காது என்ற நம்பிக்கை தான் ஆழமாக விதைக்கப்பட்டு இருக்கிறது. ஆக நடக்க வேண்டிய காரியத்தை முழு மனதோடு நினைத்து முயற்சி செய்தால் நல்லது நிச்சயம் நடக்கும். சரி இப்போது பதிவிற்குள் செல்வோம்.

நம்முடைய ஆசை, நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்றாலும் சரி, நம்முடைய கஷ்டங்கள் மனக்கவலை தீர வேண்டும் என்றாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் பண ஓலை. பிறகு ஏதாவது ஒரு மரத்திலிருந்து எடுக்கப்பட்ட குச்சி. வேப்பமரக்குச்சி, மாதுளை பழ மரத்தின் குச்சி, அல்லது வேறு ஏதாவது பூச்செடியின் குச்சி கிடைத்தால் கூட பரவாயில்லை. அதை எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

கொஞ்சமாக சிவப்பு நிற குங்குமத்தை தண்ணீர் விட்டு கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தொட்டு தான் நாம் எழுதப் போகின்றோம். தயாராக வைத்திருக்கும் குச்சையை, சிவப்பு நிற குங்கும கலவையில் தொட்டு, பனை ஓலையில் எழுத வேண்டும். என்ன எழுதுவது. உங்களுடைய கஷ்டம் தீர ஒரு வரியில் எது வேண்டும் என்றாலும் எழுதலாம்.

உதாரணத்திற்கு வருமானம் அதிகரிக்க வேண்டும். கடன் தொல்லை தீர வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும். தீராத இந்த குறிப்பிட்ட நோய் தீர வேண்டும். திருமணம் நடக்க வேண்டும். குழந்தை வரம் வேண்டும். இப்படி உங்களுக்கு எந்த வரம் வேண்டுமோ அதை சிவப்பு நிற குங்குமத்தை தொட்டு பனை ஓலையில் எழுதி, பூஜை அறையில் வைத்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை பிரார்த்தனை செய்துவிட்டு அதன் பின்பு இந்த பரிகாரத்தை தொடங்குங்கள்.

- Advertisement -

சிறிது நேரத்தில் குங்குமம் காய்ந்து விடும். ஒரு நாள் இரவு பூஜை அறையில் அந்த பனை ஓலை இருக்கட்டும். மறு நாள் இந்த பனை ஓலையை கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் விட வேண்டும். எல்லார் வீட்டின் அருகிலும் ஓடுகின்ற தண்ணீர் இருப்பது சந்தேகம்தான். முடிந்தவரை ஓடுகின்ற தண்ணீரில் இந்த பனை ஓலையை விடுவது சிறப்பு. முடியாதவர்கள் இந்த பனை ஓலையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக எடுத்துச் சென்று லேசாக மண்ணைத் தோண்டி அதில் புதைத்து விட்டு வந்து விடலாம்‌. அவ்வளவுதான். உங்களுடைய ஆசைகள் இந்த பிரபஞ்சத்தை போய் சேரும். கூடிய சீக்கிரம் நீங்கள் அந்த பனை ஓலையில் எழுதியது நடக்கும். அந்த காலத்தில் பெரிய பெரிய புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் பனை ஓலையில் தான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

முனிவர்களும் ரிஷிகளும் காரணம் இல்லாமல் எழுதுவதற்கு பனை ஓலையை தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பனை ஓலையில் என்ன விஷயத்தை எழுதுகின்றோமோ அது இந்த பிரபஞ்சத்தை கூடிய சீக்கிரம் அடையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்ட ஒரு விஷயம். முயற்சி செய்து தான் பாருங்களேன். உங்களுடைய கோரிக்கை நிறைவேறுகிறதா இல்லையா என்று பார்ப்போம். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -