தினமும் ஒரு கற்பூரத்தை வீட்டில் இப்படியேற்றி வேண்டுதல் வைத்தால், மனதிற்கு பிடித்த மாதிரி சொந்த வீடோ வாடகை வீடோ சீக்கிரம் கிடைக்கும்.

karupuram
- Advertisement -

சொந்த வீட்டில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரமாக இன்னொரு சொந்த வீடு வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரமாக சொந்த வீட்டுக்கு செல்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய சூழ்நிலை இருக்காது. வாடகை வீட்டில் தான் இருப்பார்கள். கையில் பணம் காசு வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இருக்கின்ற வீட்டை விட இன்னும் கொஞ்சம் நல்ல வீடு வாடகைக்கு கிடைக்க வேண்டும். தற்போது இருக்கக்கூடிய வாடகை வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை. சீக்கிரம் புதிய வாடகை வீடு கிடைக்க வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

பெரிய அளவில் செய்யக்கூடிய பரிகாரம் அல்ல. தினம் தோறும் ஒரு கற்பூரம் இதற்கு தேவை. சுத்தமான தேன் பாட்டில் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் பெண்கள் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு நிலை வாசலுக்கு வெளிப்பக்கம் ஒரு மண் அகல் விளக்கை வைத்து அதில் கற்பூரம் வைத்து, அந்த கற்பூரத்திற்கு மேலே ஒரு சொட்டு தேன் விட்டு அந்த கற்பூரத்தை ஏற்றி அந்த கற்பூரம் எரியும்போது, அக்கினி பகவானிடம் குலதெய்வத்திடம் உங்களுக்கு இருப்பதற்கு நல்ல வீடு வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

- Advertisement -

சில பேருக்கு அவர்கள் குடியிருக்க கூடிய வீட்டில் பிரச்சனைகள் பல இருக்கும். அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஏதாவது நல்ல வீட்டிற்கு சென்றால் நன்றாக இருக்கும் என கூட தோன்றும். ஆனால் காலி செய்வதற்கான நேரம் காலம் என்பது அமையாது. வீட்டை மாற்ற வேறு ஒரு புது வீடு கிடைக்காமல் சிரமப்பட்டு வருவார்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த மாதிரி கற்பூரத்தை தேன் விட்டு ஏற்றி வேண்டுதல் வைக்கும் போது அந்த வேண்டுதல் கூடிய சீக்கிரம் நிறைவேறி உங்களுக்கு வாழ்வதற்கு தகுதியான, உங்களுக்கு மனதிற்கு பிடித்தமான நல்ல வீடு கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

அப்படி இந்த கற்பூரம் எரிந்து முடிந்த பின்பு அந்த கற்பூரத்தை சுற்றி கொஞ்சம் மஞ்சள் தண்ணீரை தெளித்து நீங்கள் செய்த சின்ன ஹோமத்தை சாந்தப்படுத்தி விடுங்கள். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலை 6:00 மணிக்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்வது பலனை சீக்கிரமாக கொண்டு வந்து சேர்க்கும்.

கூடுமானவரை நிலை வாசலுக்கு வெளியில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் மொட்டை மாடியில் செய்யலாம். வீட்டிற்கு பின்பக்கம் இடம் இருந்தாலும் அங்கேயும் செய்யலாம். வீட்டிற்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பரிகாரத்திற்கு இத்தனை நாட்கள் தான் இந்த கணக்கெல்லாம் கிடையாது நல்ல வீடு கிடைக்கும் வரை தொடர்ந்து பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -