மாங்கல்ய தோஷம் பரிகார கோயில்

mangalya dosham pariharam temple in tamil
- Advertisement -

மாங்கல்ய தோஷம் என்பது பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய ஒரு வகை தோஷம். முற்பிறவியில் முறையான சுமங்கலி பூஜைகளை செய்யாத பெண்களுக்கு மறுபிறவியில் இத்தகைய மாங்கல்ய தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு அதனால் திருமண வாழ்க்கை அமையாமலும், திருமண வாழ்க்கை அமைந்தும் பிரச்சனைகளை சந்திக்கின்ற பெண்கள் சென்று வணங்க வேண்டிய மாங்கல்ய தோஷ பரிகார கோயில்கள் ( Mangalya dosham pariharam temple in Tamil ) என்ன என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாங்கல்ய தோஷம் நீங்க பரிகார கோயில்கள்

ஜாதகத்தில் மாங்கல்ய தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற பெண்கள் திருமணம் செய்வதற்கு முன்பாகவும் அல்லது திருமணம் முடிந்த பிறகும் திருமணஞ்சேரி அருள்மிகு ஸ்ரீ உத்வாகநாதர் திருக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமை போன்ற ஏதேனும் ஒரு தினத்தில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக சென்று, ஜாதகத்தில் இருக்கின்ற மாங்கல்ய தோஷம் நீங்குவதற்குரிய பரிகார பூஜைகளை செய்து கொள்ள வேண்டும். திருமணஞ்சேரி கோயிலுக்கு சென்று இந்த மாங்கல்ய தோஷ நிவர்த்தி பூஜை செய்து கொள்ளும் பெண்கள், தங்கள் கணவருடன் நீண்ட கால ஆயுளுடன் சுகமாக வாழ்வார்கள். திருமணம் முடிந்த பிறகு இந்த மாங்கல்ய தோஷ பூஜை செய்யும் பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தங்கள் கணவர் மற்றும் கணவரின் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக திகழ்கிறது.

- Advertisement -

தன்னை வணங்க ஏழு மலைகளை தாண்டி வருகின்ற பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி திகழ்கிறார். ஜாதகத்தில் மாங்கல்ய தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று காலை 7 மணிக்குள்ளாக திருப்பதி அருகில் உள்ள திருச்சானூர் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்று தாயாருக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

திருச்சானூர் கோயிலில் தாயாரை வழிபாடு செய்து முடித்ததும் உடனே திருமலை ஸ்ரீ வெங்கடேசலபதி கோயிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இந்த திருப்பதி – திருமலை கோவில் வழிபாடு செய்வதன் மூலம் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் கொண்ட பெண்களுக்கு இந்த தோஷத்தின் தீவிரத் தன்மை குறைந்து, மிக சிறப்பான மண வாழ்க்கை அமைய அந்த ஏழுமலையான் அருள் புரிவார்.

- Advertisement -

ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் நீங்கி சிறப்பான மணவாழ்க்கை அமைய விரும்பும் பெண்கள் நாட்டில் இருக்கும் எந்த ஒரு புகழ் பெற்ற அம்பாள் திருக்கோயில் மற்றும் லட்சுமி தேவி திருக்கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கின்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும்.

மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு திருமண வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்கும் பெண்கள் அவர்களின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு சென்று. ஸ்ரீரங்கநாதர், ரங்கநாயகி மற்றும் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள் தேவியை வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற மாங்கல்ய தோஷத்தின் ( Mangalya dosham pariharam temple in Tamil ) தீவிரம் குறைந்து, திருமண வாழ்க்கை சுமுகமாக அமையும்.

- Advertisement -