குரு தோஷ பரிகாரம்

guru dosha pariharam in tamil
- Advertisement -

நவகிரகங்களில் முழுமையான சுப கிரகம் என கருதப்படுபவர் குரு பகவான். எந்த ஒரு ஜாதகத்திலும் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தாலே வாழ்வின் சிறப்பான பலன்களை பெற முடியும். ஆனால் ஒரு சிலரின் ஜாதகத்தில் இந்த குரு கிரகம் பாதகமான நிலையில் அமைந்து, குரு கிரக தோஷம் ஏற்பட்டு, அந்த ஜாதகர்கள் வாழ்வில் பல சிக்கல்களை சந்திப்பார்கள். ஜாதகத்தில் குரு கிரக தோஷங்கள் நீங்கி சிறப்பான பலன்களை பெற செய்ய வேண்டிய குரு கிரக பரிகாரம் ( Guru dosha pariharam in Tamil ) என்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

குரு தோஷம் நீங்க பரிகாரம்

ஜாதகத்தில் குரு கிரகம் பலவீனமான நிலையிலிருப்பவர்கள் குரு பகவான் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு சென்று குரு பகவானுக்குரிய பரிகாரங்களையும், வழிபாட்டையும் செய்ய வேண்டும். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி அருள்மிகு ஆபசகாயேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதேபோன்று “வட ஆலங்குடி” என அழைக்கப்படும் சென்னை போரூரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே சேக்கிழார் பெருமானால் எழுப்பப்பட்ட குரு பகவானின் பரிகாரத்தலமாக இருக்கின்ற அருள்மிகு ராமநாதீஸ்வரர் ஆலயத்திற்கு, ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் திருக்கோயில் மூலவர் தெய்வமான செந்திலாண்டவர் எனும் முருகப்பெருமான் நவகிரகங்களில் குரு பகவானின் அம்சம் நிறைந்தவர். எனவே இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து கோயிலை மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்பவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற குரு கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

ஜாதகத்தில் குரு கிரக கிரகம் சரியாக அமையப் பெறாதவர்கள், குரு கிரக தோஷம் உள்ளவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் நவகிரக சந்நிதியில், குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு மஞ்சள் நிற லட்டுகளை வாங்கி அதை குரு பகவானுக்கு நைவேத்தியமாக வைத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கைகளாலேயே பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

குரு பகவானின் பரிபூரணமான அருள் கிடைக்க கோயில்களில் நடைபெறும் யாக பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி தரலாம். மேலும் ஏழ்மையான நிலையில் இருக்கின்ற அந்தணர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்வதும், குரு பகவானின் அருட்கடாட்சத்தை பெற்றுத்தரும் ஒரு சிறந்த பரிகாரமாக உள்ளது. ஜாதகத்தில் இருக்கின்ற குரு தோஷம் நீங்க சுத்தமான குங்குமப் பூவை வாங்கி வந்து, அதை நன்கு அரைத்து உங்கள் மோதிர கையால் தொட்டு, தினந்தோறும் உங்கள் நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்வதால் குரு பகவானின் அருள் பூரணமாக கிடைக்கும்.

மஞ்சள் நிற பொருட்கள் அனைத்துமே குரு பகவானின் ஆதிக்கம் கொண்டவையாகும். எனவே மஞ்சள் நிற பொருட்களை பிறருக்கு தானம் செய்வதன் மூலம் குரு பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். தினமும் காலையில் குளிக்கின்ற பொழுது குளிக்கின்ற தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூளை போட்டு, நன்கு கலந்து கொள்ள வேண்டும் .பின்பு நீங்கள் தண்ணீர் ஊற்றி குளிப்பதற்கு முன்பாக “ஓம் குருவே நமஹ” எனும் இந்த மந்திரத்தை மூன்று முறை துதித்து மஞ்சள் கலந்த அந்த தண்ணீரை ஊற்றி குளிக்க வேண்டும்.

ஜாதகத்தில் இருக்கின்ற குரு கிரக தோஷம் நீங்கி, சிறப்பான பலன்கள் கிடைக்க ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் அதிகாலை வேளையான பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, முடித்துவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி, மகாவிஷ்ணுவையும் லட்சுமி தேவி வழிபாடு செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் குரு பகவானின் பரிபூரணமான அருள் கிடைத்து, ஜாதகத்தில் இருக்கின்ற குரு கிரக தோஷம் ( Guru dosha pariharam in Tamil ) நீங்கி வாழ்வில் மென்மையான பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -