1/2 ஸ்பூன் மஞ்சளுடன் இதை சேர்த்து முகத்தில் மட்டும் பூசி பாருங்கள், முகம் தங்கம் போல தகதகன்னு ஜொலிக்கும்!

- Advertisement -

மஞ்சள் கிருமி நாசினி என்று எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இது உடலுக்கு உள்ளே மட்டுமல்லாமல் உடலுக்கு வெளியேயும் கிருமிகளை கொன்று ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அந்த வகையில் மஞ்சளுடன் சேர்த்து இந்த ரெண்டு பொருளை பயன்படுத்தி முகத்திற்கு பூசி வந்தால் முகம் தங்கம் போல தகதகவென மாசு, மருவில்லாமல் ஜொலிக்குமாம். இந்த ஒரு எளிய அழகு குறிப்பு ரகசியத்தை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம் முகத்தில் இருக்கும் மெல்லிய சருமத்திற்குள் கிருமிகளும், தூசிகளும் படிந்து முகப்பருக்களையும், மாசையும் உண்டாக்குகிறது. இதிலிருந்து நம்மை மீட்டெடுத்து சருமத்தை தங்கம் போல ஜொலி ஜொலிக்க வைக்க பொதுவாக அந்த காலம் முதல் இந்த காலம் வரை சுத்தமான மஞ்சள் தூளை பெண்கள் முகத்திற்கு பூசி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

- Advertisement -

மஞ்சள் பூசும் பெண்களுக்கு முகப்பருக்கள் வருவது கிடையாது. மேலும் அவர்களுடைய முகம் நீண்ட காலம் இளமையான தோற்றத்தையும் கொடுக்கும். சருமம் அவ்வளவு சீக்கிரம் முதுமையை சந்திக்காது. அப்படி இருக்கும் பொழுது இதனுடன் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து பயன்படுத்தி வந்தால் முகச் சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை ஒரே விஷயத்தில் நாம் விரட்டி அடித்து விடலாம்.

ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் மஞ்சள் கிழங்கை வெயிலில் நன்கு காய வைத்து மெஷினில் கொடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைகளில் எவ்வளவு தரமானதாக இருக்கும் என்பது நமக்கு தெரியாது, எனவே இதனை தவிர்ப்பது நல்லது. அரை ஸ்பூன் மஞ்சள் உடன் அரை மூடி எலுமிச்சையை விதைகள் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். தேன் எவ்வளவு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத ஒரு தன்மை கொண்டது. மேலும் இது சருமத்திற்குள் ஊடுருவி சென்று எப்பொழுதும் மென்மையாக வைத்துக் கொள்ள மாய்ஸ்ரைசிங் செய்து உதவும். இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக பேஸ்ட் போல கலந்து முகம் முழுவதும் ஒரே மாதிரியாக நன்கு தடவி பத்து நிமிடம் மற்றும் ஊற விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
சீயக்காய் போட்டு தலைக்கு குளிப்பீங்களா? இந்த 4 பொருளையும் சேர்த்து அலசி பாருங்க ஒரு முடி கூட இனி உங்க தலையில் இருந்து உதிராது!

அவ்வளவுதான், இப்படி தொடர்ந்து நீங்கள் வாரம் இருமுறை செய்து வர உங்களுடைய முகம் மாசு, மருவில்லாமல், தூசுகள் எதுவும் அண்டாமல் இளமையான தேகத்துடன் முதுமையை விரட்டி அடித்து முகச்சுருக்கங்கள் இல்லாமல் முக சருமம் இறுகி நன்கு பளிச்சென பொலிவான தோற்றத்துடன் இருப்பீர்கள். எலுமிச்சையில் இருக்கும் ரிச் விட்டமின் சி கருந்திட்டுகளை முகத்தில் இருந்து அடியோடு அழிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. வெண்புள்ளிகள், கரும்புள்ளிகளையும் வேருடன் எடுத்து விடும். எலுமிச்சையை தனியாக எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது. இது போல சில பொருட்கள் கலந்து பயன்படுத்தும் பொழுது இதனுடைய ஆற்றல் அற்புதமாக செயல்படும். இந்த பேக்கை நீங்கள் வாரம் ஒரு முறை போட்டு சருமத்தை செலவில்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கலாமே!

- Advertisement -