விநாயகரை இப்படி வழிபாடு செய்துவிட்டு, நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் 100% வெற்றி! லட்சியம் நிச்சயம் நிறைவேறும்.

pillaiyar-prayer
- Advertisement -

நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகரை வழிபடவேண்டும். பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்கு முன்பும் கூட, மஞ்சளில் சிறியதாக பிள்ளையாரைப் வெற்றிலையின் மேல் பிடித்து வைத்து, வழிபாடு செய்வது இன்றளவும் நம்முடைய பழக்கமாக இருந்து வருகிறது. விக்னங்களை தீர்க்கக்கூடிய தடைகளை தகர்க்க கூடிய விநாயகரின் ஒரு சிறப்புமிக்க வழிபாட்டை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

nonbu-kayiru

வாழ்க்கையில் எந்த முயற்சியை எடுத்தாலும் அது தோல்வி. முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லவே முடியவில்லை. தடைகள்! தடைகள்! தடைகள்! என்று சொல்லுபவர்கள் கட்டாயம் இந்த பதிவினை முழுமையாக படித்து வழிபாட்டினை தெரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டு முறையை திங்கட்கிழமை செய்ய வேண்டும். குளித்து முடித்துவிட்டு காலையிலேயே சுத்தபத்தமாக பூஜை அரைக்கு செல்லுங்கள். கட்டாயம் அருகம்புல் தேவை. அருகம்புல்லை எடுத்து வந்து வினாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். விநாயகருக்கு முன்பு ஒரு மண் அகல் தீபத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

manjal-kayaru

ஒரு வெள்ளை நிற நூலை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக மஞ்சள் பொடி போட்டு, தண்ணீர் தெளித்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள். தயாராக இருக்கும் வெள்ளை நூலை இந்த மஞ்சளில் போட்டு மஞ்சள் நிற நூல் ஆக மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் கையில் மஞ்சள் நிற நூல் இப்போது தயாராக உள்ளது.

- Advertisement -

நவகிரகங்களை நினைத்து உங்கள் கையில் இருக்கும் நூலில் 9 முடிச்சுகளை கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு போட்டுக்கொள்ள வேண்டும். நவகிரகங்களின் பெயர் தெரிந்தால் ஒவ்வொரு பெயராக உச்சரித்தும் இந்த முடிச்சினை போட்டுக்கொள்ளலாம். முடிச்சுப் போட்டு நூலை விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன்பு வைத்திருக்கும் அருகம்புல்லின் மேல் வைத்து விட வேண்டும். அதன் பின்பு பூஜை அறையிலேயே அமர்ந்து விநாயகரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ‘குறிப்பாக உங்களுடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரக நிலைகளால், தோஷத்தால் உங்களுடைய முயற்சிகளில் தடைகள் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்’.

kayaru

காலையில் இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் நிறைவு செய்து கொள்ளுங்கள். திங்கட்கிழமை மாலை மீண்டும் விநாயகரின் முன்பு உள்ள மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். விநாயகரை மனதார வேண்டி விநாயகர் பாதங்களில் இருக்கும் நூலை எடுத்து உங்களுடைய வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

vinayagar-5

இது போதும். உங்களுடைய காரியத்தில் வெற்றி பெற. உங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெற. இந்த வழிபாட்டு முறையினை முடித்து விட்டு அதன் பின்பு தடைபட்ட காரியத்தை மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கே புரியும். திங்கட்கிழமை இந்த வழிபாட்டினை செய்தால் நன்மை தான். ஆனால் மற்ற கிழமைகளில் உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில், இந்த வழிபாட்டினை செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது.

Vinayagar-1

இந்த வழிபாட்டினை நீங்கள் உங்களுடைய பிள்ளைக்கோ, கணவருக்கோ அல்லது உடன் பிறந்தவர்களுக்கு செய்து, அந்த நூலை எடுத்து அவர்களுடைய கையில் கட்டியும் விடலாம். நம்பிக்கையோடு விநாயகரை இந்த முறைப்படி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -