உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்தப் பூவை வைத்து வழிபாடு செய்தால், குடும்பத்தில் எப்போதுமே மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். கஷ்டம், சோகம், துயரம், துன்பம், கடன், இவைகளுக்கு இனி உங்கள் வீட்டில் இடம் கிடையாது.

flower
- Advertisement -

குடும்பம் என்றால் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி இல்லாத இடத்தில் நிச்சயமாக செல்வம் நிலைக்காது. செல்வம் இல்லாத வீட்டில் மகாலட்சுமி குடி இருக்க மாட்டாள். மகாலட்சுமி இல்லாத வீட்டில் வறுமை தான் குடியிருக்கும். வறுமை இருக்கும் வீட்டில் கஷ்டம் சோகம் துயரம் துன்பம் கடன் அனைத்தும் வந்து குடியேறி விடும். சரி, சோகம் துயரம் துன்பம் இவை அனைத்தையும் வெளியே விரட்டி அடித்து, குடும்பத்திற்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்றால் நம் வீட்டு பூஜை அறையில் எந்த பூவை வைத்து பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

flower1

மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய மகத்துவங்கள் நிறைந்த அந்த பூ மனோரஞ்சிதம் பூ. மனோரஞ்சித பூவை தினம் தோறும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் மனக் கஷ்டங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பூ கடைகளில் முன்கூட்டியே சொல்லி வைத்து, பூஜைக்கு முந்தைய நாளே பூவை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் இந்த மனோரஞ்சிதம் பூ கிடைத்தால் மிகவும் சிறப்பு. வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு எப்போதும்போல் பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். இந்த பரிகார பூஜைக்காக தனியாக ஒரு மண் அகல்விளக்கு தேவை. அந்த மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அந்த எண்ணெயில் சிறிய பச்சை கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு, பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

vilakku-poojai

வாசம் மிகுந்த இந்த தீபத்திற்கு அருகில் மனோரஞ்சித பூவை வைத்துவிடுங்கள். அதன்பின்பு உங்களுடைய குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக தீப தூப கற்பூர ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இது முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை. இந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய பூஜையை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை தினம்தோறும் 7 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

- Advertisement -

தினமும் காலையில் மண் அகல் தீபத்தில் மட்டும் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பச்சை கற்பூரம் போட்டு தீபம் ஏற்றி வைத்தால் போதும். அந்த காய்ந்த மனோரஞ்சித பூவை மாற்ற வேண்டாம். ஏழுநாட்கள் சாதாரணமாக, பூஜைஅறையில் வெள்ளிக்கிழமை பூஜை போலவே சுலபமான முறையில் வழிபாடு செய்தால் போதும். ஏழு நாட்களும் குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.

agal-vilakku-deepam

இந்த வெள்ளிக்கிழமை, இந்த பூஜையை தொடங்குகிறீர்கள். அடுத்த வெள்ளிக்கிழமை அன்று மனோரஞ்சிதம் பூ கொஞ்சம் காய்ந்து போய் இருக்கும். பரவாயில்லை, காய்ந்த பூவை குப்பையில் தூக்கி எறியக்கூடாது. ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டி, உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் ஆணையில் மாட்டி வைத்து விடுங்கள். மூன்று மாதங்களுக்கு இந்த பூவை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

deepam

நீங்கள் பூஜை செய்த இந்த பூ உங்களுடைய வீட்டில் இருக்கும் வரை உங்களுடைய இல்லத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். பெரிய கஷ்டங்கள் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு எதுவுமே வராது. கடன் பிரச்சனை இருக்காது. வீட்டில் சந்தோஷம் நிறைவாக இருக்கும்.

poojai

மூன்று மாதங்களுக்குப் பிறகு பழைய மனோரஞ்சித பூவினை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் ஒரு மனோரஞ்சித பூவை வாங்கி வைத்து பூஜை செய்து வீட்டில் மாட்டி வைத்துக் கொள்ளலாம். மனோரஞ்சித பூவின் மகத்துவத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒரு மனோரஞ்சித பூவை வாங்கி வந்து பூஜை செய்து பார்த்தாலே உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -