அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளிலும், தர்பணம் உள்ளிட்ட சடங்குகளிலும் நம் அனைவரின் காதுகளிலும் “சுக்லாம்பர தரம், விஷ்ணும்” என்று தொடங்கும் விநாயகர் மந்திரம் நிச்சயம் ஒளித்திருக்கும். எந்த ஒரு நல்ல செயலை செய்வதற்கு முன்பும் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக அந்த செயல் நிச்சயம் வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. இதோ அந்த மந்திரம்.
மந்திரம்
சுக்லாம்பர தரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேந் ஸர்வ விக்நோபசாந்தயே
இதையும் படிக்கலாமே:
திருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்ட உதவும் மந்திரம்
பொது பொருள்:
வெள்ளை நிற ஆடை உடுத்தியவரும், நிலவை ஒத்த நிறம் கொண்டவரும், நான்கு கைகளை உடையவரும், ஒளி வீசும் முகத்தை கொண்டவரும், தடைகள் அனைத்தும் நீங்க செய்பவருமான விநாயக பெருமானே நான் ஆரமிக்கும் செயலில் எந்த தடைகளும் வராமல் என்னை காத்தருள்வாய்.