கடன் பிரச்சனை முதல், வியாபாரம், தொழில் என வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட எந்தெந்த மந்திரத்தை துதிக்கலாம்

manthiram
- Advertisement -

“மந்திரத்தால் மாங்காய் விழுமா” என ஒரு சிலர் மந்திர கலையின் ஆற்றலை ஏளனம் செய்வார்கள். ஆனால் “குரு’வின் அருள் பெற்று, “திரு”வின் அருள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து மந்திரங்களைத் துதிப்பவர்களுக்கு, அம்மந்திரங்கள் வழங்காத பாக்கியங்கள் இல்லை என கூறலாம். அந்த வகையில் நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் தீர நாம் துதிக்க வேண்டிய மந்திரம் எவை என இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கடன் பிரச்சனைகள் தீர, பொருளாதார கஷ்ட நிலை மாறி சகல விதமான ஐஸ்வர்யங்களும் பெருக தினந்தோறும் ஆதிசங்கரர் அருளிய “கனகதாரா ஸ்தோத்திரம்” மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

- Advertisement -

எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை தோஷங்கள் நீங்க மற்றும் முன் ஜென்ம கர்ம வினைகளால் ஏற்படுகின்ற தீராத நோய்களின் பாதிப்புகள் விரைவில் நீங்க “சுதர்சன கவசம்” மந்திரங்களை தினந்தோறும் துதித்து வர வேண்டும்.

நீங்கள் செய்து வருகின்ற தொழில், வியாபாரங்களில் புகழ்பெற்று சிறப்பான லாபங்களைப் பெற தினந்தோறும் “அஷ்டலட்சுமி கவசம்” மந்திரத்தை பாராயணம் செய்து வர வேண்டும்.

- Advertisement -

நீண்டகாலமாக தங்களின் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை தேடி அலைபவர்கள், தினந்தோறும் காலையில் “நீலா சரஸ்வதி கவசம்” எனும் மந்திர துதியை துதித்து வந்தால் விரைவில் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சகல விதமான தோஷங்களும் நீங்க தினந்தோறும் காஞ்சிபுரத்தில் அருள்புரியும் “ஸ்ரீ காமாட்சி அம்மன் கவசம்” பாராயணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

சிலருக்கு நீண்ட நாட்களாக இருக்கின்ற திருமணம் மற்றும் புத்திர பாக்கிய தடை, தாமதங்கள் போன்ற குறைகள் தீர தினந்தோறும் “சந்தான கோபால கவசம்” மந்திரத்தை துதித்து வந்தால் விரைவிலேயே திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கிற நிலைகள், கிரக திசைகள் காரணமாக ஏற்படுகின்ற சகலவிதமான கிரக தோஷங்கள் தீர சிவபெருமானுக்குரிய “ருத்ர கவசம்” மந்திரத்தை துதித்து வந்தால் கிரக தோஷங்கள் விலகும்.

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நாம் எடுக்கின்ற சகல விதமான முயற்சிகளில் சிறப்பான வெற்றியை பெற “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கவசம்” மந்திரத்தை தினந்தோறும் துதித்து வர வேண்டும்.

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீர, நீதிமன்ற வழக்குகளில் உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் நீங்கள் வெற்றி பெற, ஸ்ரீராமதூதன் ஆஞ்சநேயருக்குரிய “ஹனுமந்த கவசம்” மந்திரத்தை தினந்தோறும் கொடுத்து வர வேண்டும்.

வாழ்க்கையில் ஏற்படுகின்ற கஷ்ட நிலை மாற நமது சகலவிதமான கர்ம வினைகள் தீர தினந்தோறும் “ஸ்ரீதேவி கருமாரி அம்மன் துதி” படித்து வந்தால் நல்ல பலன் பெறலாம்.

உங்களுக்கு எதிரிகளால் ஏற்படுகின்ற பயம் நீங்க, விபத்துகள், திடீரென ஏற்படும் ஆபத்துகள் நீங்க ஸ்ரீ “நரசிம்மர் கவசம்” துதி தினந்தோறும் பாராயணம் செய்ய வேண்டும்.

நீங்களோ அல்லது உங்களை சார்ந்தவர்களோ தீய பழக்க வழக்கங்களால் பாதிக்கப்படாமல், நல்வழியில் நடந்து, வாழ்வில் சிறப்பான நிலையை பெற தினந்தோறும் உங்களுக்கு உங்கள் குருவால் அருளப்பட்ட “காயத்ரி மந்திரம்” துதித்து வழிபடுவது நல்லது.

- Advertisement -