மாசு மறு அற்ற, முகப்பரு இல்லாத சருமத்தை தரும் மரமஞ்சள். முகத்தில் தேடினாலும் தழும்பு கிடைக்காது.

face14
- Advertisement -

நிறைய பேருடைய முகம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் முகத்தில் ஆங்காங்கே கருப்பு நிறத்தில் தழும்பு தெரியும். சின்ன சின்ன கட்டிகள், கொப்பளங்கள், முகப்பருக்கள் வந்து போன தழும்பை நீக்குவது அவ்வளவு கடினமாக இருக்கும். உங்களுடைய சரும அழகை குறைக்க கூடிய எந்த மாசு மறுவாக இருந்தாலும் அதை சரி செய்ய இயற்கையான ஒரு வைத்தியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தொடர்ந்து இந்த குறிப்பைப் பின்பற்றி வந்தால் உங்கள் சருமம் பார்ப்பதற்கு பொலிவாக மாறும். முகத்தில் இருக்கும் தழும்புகள் கண்ணுக்குத் தெரியாமல் படிப்படியாக குறைய தொடங்கும்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் மர மஞ்சள். நாட்டு மருந்து கடைகளில் இது சுலபமாக கிடைக்கும். மரத்திலிருந்து எடுக்கக்கூடிய ஒரு மஞ்சள் வகைதான் இது. இந்த மஞ்சளை கேரளாவில் அழகு குறிப்புக்காக நிறைய பயன்படுத்துவார்கள். நம்முடைய தமிழ்நாட்டிலும் நாட்டு மருந்தில் இந்த மரமஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. காயங்கள் கட்டிகள் சீக்கிரம் ஆற வேண்டும் என்பதற்காக காயத்தில் இருக்கக்கூடிய கிருமிகள் அழிய வேண்டும் என்பதற்காக வேப்பிலை குப்பைமேனி இலை, கருமஞ்சள் இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து அந்த விழுதை எடுத்து காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் காயம் சீக்கிரம் சரியாகும். ஏதேனும் சருமத்தில் அரிப்பு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்ய இந்த மரமஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரி இப்போது அழகு குறிப்பு பார்த்து விடலாம்.

- Advertisement -

முதலில் ஒரு 50 கிராம் அளவு மர மஞ்சலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு அந்த மஞ்சள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் இதை ஊற வைத்து விட்டால் கூட போதும். மறுநாள் காலை எழுந்தால் மஞ்சள், தண்ணீரில் நன்றாக ஊறி இருக்கும். நாம் ஊற்றிய தண்ணீர் மஞ்சள் நிறத்திற்கு மாறி இருக்கும். தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த மஞ்சள் தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதில் கொஞ்சம் நல்ல தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். அதாவது 1/4 கப் அளவு மஞ்சள் தண்ணீர் இருந்தால், 1/4 தப் அளவு நல்ல தண்ணீரை அதில் ஊற்றி கலந்து வைத்துக் கொண்டால் நமக்கு தேவையான ஸ்பிரே ரெடி.

- Advertisement -

இந்த ஸ்ப்ரே 7 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். பிரிட்ஜில் வைக்காமலேயே. இந்த தண்ணீரை இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவி விட்டு மேக்கப் இல்லாமல் இந்த தண்ணீரை முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்பிரே முகத்தில் அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். பிறகு இரவு முகம் கழுவ வேண்டாம்.

மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக்கொள்ளலாம். தினமும் இந்த குறிப்பை பயன்படுத்தி வர உங்களுடைய சரும பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். தழும்புகள் கண்ணுக்கே தெரியாமல் மறையும். முகப்பரு இல்லாமல் இருப்பவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தி வந்தால் முகப்பருவே வராது. முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -