மார்கழி பௌர்ணமியில் பீரோவில் வைக்க வேண்டிய பொருள்

pournami1
- Advertisement -

இன்றைய தினம் மார்கழி மாத பௌர்ணமி நாள். அதிலும் இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பௌர்ணமி வந்திருப்பதால், கடன் பிரச்சனை தீருவதற்கு இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு நமக்கு உடனடியாக பலன் அளிக்கும் என்பது நம்பிக்கை. இன்று மாலை 6.00 மணிக்கு மேல் சந்திர பகவான் உதயமான பிறகு உங்களுக்கு எந்த நேரம் கிடைக்குதோ, இரவு 11.00 மணிக்கு முன்பாக, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம்.

நிலவின் ஒளியில் இந்த 1 பொருளை காண்பித்து விட்டு, அதை அப்படியே கொண்டு போய் பீரோவில் வைத்தால் உங்கள் கடன் சுமை குறையும். கட்டு கட்டாக பீரோவில் பணம் சேரும் என்பது நம்பிக்கை. கட்டுக் காட்டாக பணம் என்றால், சும்மாவே இருந்தால் கூரையை பிச்சிட்டு கொட்டுமா, என்று கேட்காதீங்க.

- Advertisement -

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்த தான் இப்படிப்பட்ட பரிகாரங்கள் நமக்கு கை கொடுக்கும். அந்த வரிசையில் இன்று மாலை பௌர்ணமி நிலவு ஒளியில் நாம் செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம் தான் இது.

தாந்த்ரீக பரிகாரமாகவே இருந்தாலும், உங்களுடைய குல தெய்வத்தை நினைத்து இதை செய்யப் போறீங்க. சரி பரிகாரத்தை எப்படி செய்வது. பீரோவில் வைக்க வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பணம் சேர மார்கழி பௌர்ணமி நிலவு பரிகாரம்

இன்று நிலவு ஒளியில் நாம் காண்பிக்கப் போகும் பொருள் பச்சை கற்பூரம். பீரோவில் வைக்கப் போகும் பொருள் அந்த பச்சை கற்பூரம் தான். எப்படி தெரியுமா. இன்று மாலை 6.00 மணிக்கு மேல் நிலவு ஒளி பிரகாசமாக பிரதிபலிக்கும் இடமாக பார்த்து, தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மொட்டை மாடி, பால்கனி, வீட்டு முன்பக்கம், கொள்ளை பக்கம் எந்த பக்கமாக இருந்தாலும் சரி, கையில் இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து, இரண்டு கைகளையும் ஏந்தியபடி சந்திர பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இரண்டு கைகளுக்கு நடுவே, 2 பச்சை கற்பூர துண்டுகள், வைத்துக் கொள்ளுங்கள். இறைவா எனக்கு பணக்கஷ்டம் தீர வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும், வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க நீ தான் வழியை காட்ட வேண்டும் என்று மனம் உருகி வேண்டி, இந்த பச்சை கற்பூரத்தை ஒரு பச்சை துணியில் வைத்து, முடிச்சாக கட்டி, குலதெய்வத்தை வேண்டி அப்படியே கையோடு கொண்டு போய் பீரோவில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமியில் செய்ய வேண்டிய முருகர் வழிபாடு

அந்த நிலவு ஒளியின் நேர்மறை ஆற்றல், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றல், நீங்கள் சொன்ன வார்த்தைகளுடைய நேர்மறை ஆற்றல், உங்களுடைய நேர்மறை எண்ணம் எல்லாம் சேர்ந்து உங்க பீரோவில் பரவி இருக்கும். நிறைய பணம் சேர தொடங்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடலாம். சேமிப்பையும் உயர்த்தலாம். இந்த பரிகாரத்தை செய்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த தாந்திரீக பரிகார பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -