இன்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமியில் செய்ய வேண்டிய முருகர் வழிபாடு

muruga1
- Advertisement -

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு அந்த கனவு சீக்கிரம் நினைவாக மாறும். ஆனால் பல பேருக்கு அந்த சொந்த வீடு கனவு, கனவாகவே தான் இருக்கிறது. இன்று மார்கழி மாதம் பௌர்ணமி நாள் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. இன்றைய நாள் முருகப்பெருமானை வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இன்று மாலை 6 மணிக்கு சந்திர பகவான் உதயமாக தொடங்கிவிடுவார். இந்த நேரத்தில் நம்முடைய வீட்டில் முருகப்பெருமானை பின் சொல்ல கூடிய முறையில் வழிபாடு செய்தால், உங்கள் வாழ்க்கையும் அந்த நிலா ஒளியை போல் பிரகாசமாக ஜொலிக்க தொடங்கி விடும். உங்கள் சொந்த வீடு கட்டும் கனவு சீக்கிரம் நிறைவேறும். அந்த வழிபாடு என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

மார்கழி பௌர்ணமி முருகன் வழிபாடு

இன்று மாலை 6 மணிக்கு உங்கள் வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் திரு உருவ படத்தை துடைத்து சந்தன குங்கும பொட்டு வைத்து, செவ்வரளி பூக்களை போட்டுக்கொள்ளுங்கள். 6  வெற்றிலை, 6 மண் அகல் விளக்கு, விளக்கேற்ற நெய், இந்த பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

ஒரு தட்டில் ஆறு வெற்றிலைகளை அடுக்கி வைத்து விட்டு, அதன் மேலே மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, மண் அகல் விளக்கை வைத்து, அதில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றி முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்து விடுங்கள். முருகப் பெருமானுக்கு ஏதாவது ஒரு நெய்வேதியம் வைக்க வேண்டும். இரண்டு வாழைப்பழம் வைத்தாலும் சரிதான், உங்கள் கையால் சர்க்கரை பொங்கல் செய்து வைத்தால் இன்னும் சிறப்பு.

- Advertisement -

பிறகு அரோகரா அரோகரா அரோகரா என்ற நாமத்தை சொல்லி சொந்த வீடு கட்டும் கனவு சீக்கிரம் நிறைவேற வேண்டுமென்று மனமுருகி முருகப்பெருமானிடம் வேண்டுதல் வையுங்கள். பிறகு தீப தூப ஆராதனை காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இன்று மாலை சரியாக 6.00 மணியில் இருந்து இரவு 9.00 மணி வரை இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

இப்போது நிறைய பேர் வீட்டில் வேல் வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கிறது. உங்களுடைய வீட்டில் வேல் இருந்தால் அந்த வேலுக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்து சந்தன குங்கும பொட்டு வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்வது இன்னும் கூடுதல் சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வழிபாட்டை முடித்துவிட்டு வெளியில் சந்திரபகவான் பிரகாசமாக ஜொலிப்பார் அவரை வந்து தரிசனம் செய்யுங்கள். இரு கைகளையும் ஏந்தி சொந்த வீடு கட்டும் வரத்தை கொடு சந்திர பகவானே என்று சொல்லி ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி இன்றைய பௌர்ணமி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்லது நடந்தே தீரும். கஷ்டங்கள் தீர இந்த அற்புதம் வாய்ந்த பௌர்ணமி நாளை யாரும் தவற விடாதீங்க. வாய்ப்பு உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -