மார்கழி வெள்ளியில் வீட்டில் போட வேண்டிய சாம்பிராணி தூபம்

vetrilai
- Advertisement -

வாழ்வில் வளம் பெற மார்கழி மாதம் மறக்காமல் இந்த ஒரு விஷயத்தையும் செய்யுங்கள். மார்கழி மாதம் முழுவதுமே வழிபாட்டிற்கு உரிய நாட்கள் தான், இருந்தாலும் மார்கழி மாதம் முழுவதும் வழிபாடு செய்ய முடியவில்லை என்பவர்கள், மார்கழியில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.

அந்த பூஜையின் போது மணக்கம் மணக்க வீட்டில் தூபம் போட வேண்டும். இந்த தூபத்திலிருந்து வெளிவரும் வாசனை நம் வீட்டில் இருக்கும் துர்சக்திகளை அழிக்கும். நம் வீட்டில் செல்வ கடாட்சத்தை உண்டு பண்ணும். வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நின்று நிதானமாக யோசித்து செயல்படுவார்கள்.

- Advertisement -

பின்பு அவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி குவிய தொடங்கி விடும். பின்னாலேயே பணமும் கொஞ்சம் கொஞ்சமாக சேர தொடங்கி விடும். ஆக இல்லறம் சிறப்பாக இருக்க, இந்த சாம்பிராணி தூபமும் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது.

இப்போது மார்கழி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மார்கழி மாதத்திற்கு என்றே பிரத்யோகமாக சாம்பிராணி தூபம் போடக்கூடிய முறை ஒன்று இருக்கிறது. அந்த சாம்பிராணி தூபத்தை எப்படி போடுவது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

மார்கழியில் சாம்பிராணி தூபம் போடும் முறை

இந்த சாம்பிராணி தூபம் போட நமக்கு தேவையான பொருள் மருதாணி விதை, குங்கிலியம், வெற்றிலை சாறு, பால் சாம்பிராணி பொடி. இந்த பொருட்கள் எல்லாமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். வெற்றிலை சாறுக்கு மட்டும் வெற்றிலையை வாங்கி சின்ன சின்ன துண்டுகளாக கிழித்து, உள்ளங்கைகளில் வைத்து கசக்கி எடுத்தால் சாறு கிடைக்கும்.

இரண்டு வெற்றிலையில் இருந்து, 1 ஸ்பூன் சாறு கிடைத்தால் கூட போதும். மருதாணி விதை, குங்கிலியம், சாம்பிராணிதூள் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் இந்த மூன்று பொருள் சேர்ந்த கலவையை எடுத்து தனியாக போட்டு அதில் கொஞ்சமாக வெற்றிலை சாறு முன்கூட்டியே ஊற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

சிறிது நேரத்தில் வெற்றிலை சாறை எல்லாம் அந்த பொருள் தன்னகத்தை உறிஞ்சிக் கொள்ளும். வெள்ளிக்கிழமை இந்த தூபத்தை போட வேண்டும் என்றால், வியாழக்கிழமையை நீங்கள் இந்த விஷயத்தை எல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளணும். வெள்ளிக்கிழமை காலை எழுந்து வீட்டில் பூஜை போடும்போது கொஞ்சமாக கொட்டாங்குச்சியில், நெருப்பு மூட்டி கொள்ளலாம்.

இல்லை என்றால் தேங்காய் நாரில் நெருப்பு மூட்டி கூட அந்த நெருப்பில் நாம் தயார் செய்து, வெற்றிலை சாறு ஊற்றை கலந்து வைத்திருக்கும் இந்த சாம்பிராணி தூபக் கலவையை போட வேண்டும். வெற்றிலைச் சாறு ஊற்றி இந்த சாம்பிராணி தூபத்தை போடும்போது நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் அதிகம் சேர மஞ்சள் பரிகாரம்

பின்னாலேயே செல்வ பலம் அதிகரிக்க தொடங்கிவிடும். இந்த தூபத்தை சுவாமிக்கு மட்டும் காட்டுங்கள். மற்றபடி வீடு முழுக்க மற்ற அறைகளுக்கு இந்த தூபத்தை கொண்டு போய் காட்டக்கூடாது. இந்த தூபம் இறைவனுக்கு மட்டுமே சமர்ப்பணம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -