தங்கம் அதிகம் சேர மஞ்சள் பரிகாரம்

guru dheepam
- Advertisement -

தங்க நகை அதிகமாக சேர்க்க வேண்டும் என்பது ஆசை மட்டும் இல்லை. இப்போது அது ஒரு சமுதாய அந்தஸ்து மிக்கதாகவும் பார்க்கப்படுகிறது. ஒருவர் வெளியில் செல்லும் பொழுது அவர் அணிந்திருக்கும் நகைகளை வைத்து அவரின் மதிப்பீடுகள் அமைகிறது. அதற்காகவே பலரும் தங்க நகையை சேர்க்க ஆசைப்படுகிறார்கள். மற்றொரு புறம் ஒரு குண்டுமணி தங்கம் கூட தங்களிடம் சேரவில்லையே என்ற கவலைப்படும் பெண்களும் இருக்கிறார்கள்.

எப்படி இருப்பினும் தங்கத்தை யாரும் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. எவ்வளவு இருந்தாலும் அதை மேலும் சேர்க்கவே ஆசைப்படுகிறார்கள். அப்படி நீங்களும் தங்க நகை அதிகம் சேர்க்க ஆசைப்பட்டால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யுங்கள் தங்கம் வாங்கும் யோகம் உங்களை தேடி வரும். அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் காண்போம்.

- Advertisement -

தங்கம் சேர பரிகாரம்

தங்க நகை சேர்ந்து கொண்டே செல்ல வேண்டுமெனில் முதலில் தங்க நகை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதன் பிறகு அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இத்துடன் சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யலாம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை வியாழன் அன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும். வியாழன் அன்று செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை செய்யலாம் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்யலாம். வியாழக்கிழமை செய்யும் போது மாலையில் செய்யுங்கள் மற்ற நாட்களில் செய்வதாக இருந்தால் ராகு காலம் எமகண்டம் இல்லாமல் இருக்கும் நேரமாக பார்த்து செய்யுங்கள்.

- Advertisement -

தங்கம் சேர வேண்டும் எனில் குரு பகவான் அனுகிரகம் நிச்சயம் தேவை. ஆகையால் தான் வியாழக்கிழமை செய்யும் போது இதற்கான பலன் அதிகம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இதற்கு ஒரு குண்டுமணி தங்கமாவது நம் வீட்டில் இருக்க வேண்டும் அதை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த தங்கத்தை மஞ்சளில் விநாயகர் பிடிப்பது போல பிடித்து அதனுள் எந்த தங்கத்தை வைத்து விடுங்கள்.

இப்போது உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வம் விநாயகர் அனைவரையும் மனதார நினைத்து உங்களுக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அந்த தங்கம் எனக்கு வந்து சேர வேண்டும். அத்துடன் அந்த நகை எனக்கு வந்து சேர்ந்தவுடன் இந்த நகையை உங்களுடன் சேர்த்து விடுவேன் என்று ஏதாவது ஒரு தெய்வத்திற்கு வேண்டுதல் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த மஞ்சள் பூஜை அறையில் இருக்கட்டும். இப்போது தினமும் இந்த மஞ்சளுக்கு முன்பாக நாம் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு ஒரு பவுலில் கோதுமையை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளுங்கள் அதில் ஒரு காப்பர் விளக்கை வாங்கி அதில் ஆரஞ்சு நிற திரியை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை

நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மஞ்சளும் ஏற்றக் கூடிய இந்த தீபமும் உங்கள் கனவை சீக்கிரத்தில் நினைக்கும் சக்தி கொண்டவை நீங்கள் நினைத்ததை விட அதிகமாகவே உங்களுக்கு தங்கம் வாங்கக் கூடிய யோகத்தை தரும் அதற்கான வருமான வாய்ப்புகளை பெருக்கி தரும் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -