எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அதை உடனே தீர்த்து வைக்கும் தெரு முனையில் இருக்கும் தெய்வங்கள். இத்தனை நாட்களாக இவர்களை மறந்து விட்டோமே.

amman7
- Advertisement -

தீராத கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் வரும்போது எங்கெங்கோ போய் தீர்வை தேடுவோம். நம்முடைய பிரச்சனைக்கு தீர்வு சொல்வதற்கு, நம் சொந்தக்காரர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொரு கோவிலாக சொல்லுவார்கள். எல்லா கோவிலுக்கும் சென்று வேண்டுதல் வைப்போம். அதையெல்லாம் தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் நம்முடனே நம் வீட்டின் முனையில் இருக்கும் தெய்வங்களை நாம் மறந்திருப்போம். உங்களுடைய கஷ்டங்களை என்றாவது உங்கள் ஊர் தெய்வத்திடம் போய் சொல்லி இருக்கீங்களா. உங்கள் தெருவின் முனையில் இருக்கும் தெய்வங்களிடம் முறையிட்டுள்ளீர்களா. சில பேர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கே போக மாட்டாங்க. பிறகு எங்கு போய் கஷ்டத்தை சொல்வது.

நம்மில் நிறைய பேர் கஷ்டம் என்று வந்துவிட்டால் பிரசித்தி பெற்ற பெரிய பெரிய கோவிலை தான் தேடி ஓடுவோமே தவிர, அவரவர் ஊரில் தெரு முனையில் இருக்கக்கூடிய தெய்வங்களை மறந்திருப்பார்கள். தீராத கஷ்டங்கள் தீர, பெரிய பெரிய பரிகாரங்களை செய்வதற்கு முன்பு ஒரு முறை உங்கள் வீட்டு தெரு முனையில் இருக்கும் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டு தெரு முனையில் இருக்கக்கூடிய அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். இந்த இரண்டு வழிபாடுகள் உங்களுடைய கஷ்டங்களை சீக்கிரம் தீர்த்து வைக்கும். காரணம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் தெய்வங்கள் தினம் தினம் நீங்கள் படும் கஷ்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. வரக்கூடிய கஷ்டத்திலிருந்து உங்களை பாதுகாப்பது இந்த தெய்வங்கள் தான்.

- Advertisement -

பல லட்ச ரூபாய் செலவு செய்து தீர்க்க முடியாத வியாதிகளை கூட மந்திரத்து போட்ட திருநீறு தீர்த்து வைக்கும். அப்படித்தாங்க பரிகாரங்களும். முதலில் உங்களுக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால், உங்கள் தெரு முனையில் இருக்கும் விநாயகர்கோவிலுக்கு சென்று ஒரு ரூபாயை காணிக்கையாக செலுத்தி விட்டு, விநாயகரை வலம் வந்து தோப்புக்கரணம் போட்டு ஒரு சிதறு தேங்காய் உடைத்து அருகம்புல் மாலை சாற்றி வேண்டிக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டின் அருகில் அம்மன் கோவிலில் இருந்தால் அந்த அம்மன் கோவிலுக்கு சென்று மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்றி, பழக்கம் இருந்தால் மாவிளக்கு போட்டு, அம்மனுக்கு வாசனை நிறைந்த பூக்களை வாங்கி கொடுத்து, உங்களால் முடிந்தால் நிவேதியமாக சர்க்கரை பொங்கல் செய்து வைத்து அம்மனின் பாதங்களை பற்றிக் கொண்டாலே போதும் கஷ்டங்கள் தூர சென்று விடும்.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் வரும் நல்லது கெட்டத்திற்கு காரணமாக இருக்கக் கூடிய கிரகங்கள் என்றால் அது ராகு பகவான், கேது பகவான். ராகு பகவானுக்கு உண்டான அதி தேவதை என்றால் அது அம்பாள். அதாவது துர்க்கை அம்மன். கேது பகவானுக்கு அதிதேவதை என்றால் அது விநாயகர். இதனால்தான் இந்த இரண்டு தெய்வங்களையும் ஒவ்வொரு தெருக்களுக்கு முனையில் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் இல்லாத ஊரே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த காலத்திலேயே வாழ்ந்த முன்னோர்கள் இதற்காகத்தான் இந்த இரண்டு தெய்வங்களையும் நம் வீட்டின் அருகிலேயே இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று இப்படி ஒரு ஏற்பாட்டை நமக்காக செய்து வைத்துள்ளார்கள். ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு கஷ்டம் என்று வந்ததும் அருகில் இருக்கும் இந்த தெய்வங்களிடம் சொல்லாமல் இருப்பது சரியா என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள். துன்பம் என்று வந்தால் தூர இருக்கும் பரிகார ஸ்தலங்களுக்கு செல்வதற்கு முன், நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன இந்த சின்ன சின்ன விஷயங்களையும் பின்பற்றலாம். நிச்சயமாக கஷ்டங்கள் சீக்கிரம் காணாமல் போகும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -