வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் வெளியே செல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு சுவாமி படம் உங்கள் வீட்டிற்குள் வர வேண்டும்.

muruga
- Advertisement -

சில வீடுகளில் உள்ளவர்கள் கஷ்டத்தையும் தரித்திரத்தையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வருவார்கள். வீட்டில் இருப்பவர்கள் பூஜை புனஸ்காரங்கள் போன்ற இறைவழிபாடுகளை செய்யும் போது வீட்டிற்குள் நல்லது வரும். நன்மை நடக்கும். ஆனால் நம் வீட்டிற்குள் கெட்டது எப்படி வரும். இந்த சந்தேகம் உங்களுக்கு இருக்கும் அல்லவா. அதற்கான விடையையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதேசமயம் வீட்டிற்குள் வரும் கெடுதலின் மூலம், துன்பங்கள் வராமல் இருக்க வாஸ்து ரீதியான பிரச்சினைகள் தீர, தரித்திரம் நீங்க, நாம் செய்ய வேண்டிய ஒரு சின்ன வழிபாட்டு முறையை பற்றியும் தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சில பேர் உள்ளார்கள். தரித்திரம் கொடுக்கக் கூடிய அத்தனை செயலையும் செய்து வருவார்கள். வீட்டில் நகத்தை கடித்து துப்புவது. சரியாக மாலை 6 மணிக்கு வீடு கூட்டுவது, வீட்டிற்குள் செருப்பு போட்டு நடப்பது, அமர்ந்த இடத்தில் எப்போதும் கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பது. சில பெண்கள் விளக்கு வைத்த பின்பு தான் தலையை விரித்து போட்டு தலை சீவுவார்கள். அடிக்கடி அமங்கலமான வார்த்தையை பேசுவது.

- Advertisement -

காலை 10 மணி வரை தூங்குவது. மாலை விளக்கேற்றும் நேரத்தில் தூங்குவது. தினமும் வீட்டில் விளக்கு ஏற்றாமல், எந்நேரமும் வாசலில் உட்கார்ந்து அடுத்தவர்களை பற்றி புறம் பேசுவது. வீட்டில் இப்படி செய்யக்கூடாத செயல்களை எல்லாம் சிலர் செய்வார்கள். வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை தலையில் பேன் சீவுவது போன்ற செயல்களும் தரித்திரத்தை உண்டாக்கக்கூடிய செயல்கள் தான். இப்படி வீட்டிற்கு ஆகாத விஷயங்களை வீட்டில் இருப்பவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு தவறு என்று தெரியும். ஆனாலும் அவர்களுடைய மனது, இந்த தவறுகளை எல்லாம் செய்ய தூண்டிக்கொண்டே இருக்கும்.

காரணம் அவர்களுக்கு நடக்கும் கெட்ட நேரம். வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட வாஸ்து. இதையெல்லாம் சரி செய்வது எப்படி. முழுமையாக நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக மருதமலை முருகன் வழிபாடு மிக மிக நல்லது. இந்த மருத மலை வழிபாடு நம் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மருதமலை முருகர் திருவுருவப்படத்தை வாங்கி பூஜை அறையில் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் 6 மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும். இதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பிறக்கும்.

வீட்டில் இருந்து கொண்டு தகாத வேலைகளை, தகாத நேரத்தில் செய்பவர்களுடைய மனது மாறும். மனதிற்குள் அமர்ந்து கொண்டு கெட்ட வேலைகளை செய்ய தூண்டும் கெட்ட சக்தி அனைத்தும் விலகும். வீட்டிற்குள் இந்த மருதமலை ஆண்டவன் வந்துவிட்டால், வீட்டை பிடித்த பீடை உடனே வெளியே சென்று விடும். வீட்டில் எல்லா விஷயங்களும் தலைகீழாக மாறிவிடும். ஆத்மார்த்தமாக நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் ஏற்கனவே வேறு முருகரின் திரு உருவப்படம் இருந்தாலும், இந்த முருகனை நீங்கள் வாங்கி வீட்டில் வைக்கலாம்.

- Advertisement -