சாம்பிராணி புகையுடன் இந்த விதையை சேர்த்து தூபம் போட்டால் அபரிமிதமான தொழில் வளர்ச்சியை மகாலட்சுமி அருள் புரிவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது தெரியுமா?

maruthani-seed-lakshmi-sambrani
- Advertisement -

பொதுவாக வீடு முழுவதும் வாரம் ஒரு முறையாவது தூபம் போட வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் தோஷங்கள், திருஷ்டிகள், எதிர்மறை ஆற்றல்கள், துர் சக்திகள் அனைத்தும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. இத்தகைய நம்பிக்கையை காலம் காலமாக பின்பற்றி வரும் நம் மக்களிடையே வறுமை நீங்கி, மகாலட்சுமியின் அருள் கிடைக்க தூபம் காண்பிக்கும் பொழுது இந்த ஒரு விதையையும் சேர்ப்பது அதிர்ஷ்டம் தரும். அது என்ன விதை? எப்படி அதை கொண்டு தூபம் போடுவது? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பது போன்ற அரிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சாம்பிராணி புகையை வீடுகள் மட்டும் அல்லாமல் தொழில் செய்யும் இடங்கள், வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றிலும் காண்பிப்பது உண்டு. அது மட்டும் அல்லாமல் உத்தியோகம் செய்யும் இடத்திலும் இது போல சாம்பிராணி புகை போட்டால் நல்ல வளர்ச்சியை காணலாம். மந்தமான நிலை நீங்கி நல்ல சுறுசுறுப்பு உண்டாக்கக்கூடிய இந்த சாம்பிராணி புகையை வாரம் ஒரு முறையாவது காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

குழந்தைகளுக்கு சாம்பிராணி புகை போடக்கூடாது என்றெல்லாம் கூறுவார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை, குழந்தைகளுக்கு மெல்லியதாக புகை வர செய்து தினமும் சாம்பிராணியை தலைக்கு காண்பித்து வர தலையில் நீர் கோர்த்தல், சளி பிடித்தல் போன்ற பிரச்சனைகள் வராமல் ஆரோக்கியமாக இருக்கும். பெரியவர்களும் தலைக்கு காண்பிக்க தலை பாரம் குறையும். சாம்பிராணி புகை போட வேண்டும் என்பதற்காக அதிக புகையை உண்டாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

செயற்கையாக கிடைக்கும் சாம்பிராணி புகையை விட, நாமே சாம்பிராணியை மட்டும் வாங்கி தேங்காய் சிரட்டை ஒன்றை எரித்து கரியாக்கி அதில் சாம்பிராணியை போட்டு தூபம் வர செய்ய வேண்டும். இது தான் ரொம்பவும் ஆரோக்கியம் தரக்கூடியதாக இருக்கும். இப்படி சாம்பிராணி புகை போடும் பொழுது அதனுடன் வெண்கடுகு சேர்த்து போடுவது ரொம்பவும் விசேஷமானது. வெண்கடுக்கு கடுமையான கண் திருஷ்டியை நீக்கக்கூடிய அற்புதமான ஆன்மீக பொருளாக கருதப்படுகிறது. இது வெள்ளை நிறத்தில் இருக்கும் கடுகு வகையாகும், போட்டதும் பொரிய ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த வெண்கடுகு பொரிய பொரிய வீட்டில் இருக்கும் துஷ்ட தேவதைகள் அனைத்தும் தலை தெரிக்க ஓடுவதாக கூறப்படுகிறது. மேலும் இதனுடன் நீங்கள் மருதாணி விதையை சேர்த்து தூபம் போட்டால் கூடுதல் நன்மைகளை அடையலாம். குறிப்பாக வீடுகளில் மருதாணி விதையை போட்டு தூபம் ஏற்றுவதை விட, வியாபாரம் செய்யும் இடங்கள், தொழில் ஸ்தாபனங்கள், பெரிய பெரிய தொழில் கூடங்கள் போன்றவற்றில் இது போல செய்வதன் மூலம் நல்லதொரு வளர்ச்சியை அடைய முடியும்.

மருதாணி விதைகளில் மகாலட்சுமி நிறைந்திருக்கிறாள். உங்களுடைய தொழில் வளர்ச்சி அதிகரிக்க தூபம் போடும் பொழுது சிறிதளவு மருதாணி விதையை பொடித்து போட வேண்டும். அதனுடன் வெண்கடுகம் சேர்த்து தூபம் போட தீய சக்திகள், கண் திருஷ்டிகள், கடுமையான தோஷங்கள் எல்லாமே ஒரே அடியாக நீங்கி தடைபட்ட வளர்ச்சி மீண்டும் முன்னெடுக்க துவங்கும். இதனால் லாபம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் அடையும். மகாலட்சுமி நம்மிடம் தங்குவதற்கு ஆசைப்படுவாள். எனவே இனி வாரம் ஒருமுறை மருதாணி விதை போட்டு தூபம் ஏற்ற மறக்காதீர்கள்.

- Advertisement -