இதோ உங்களுக்காக மசால்வடை ரகசிய பொடி. இதனை மட்டும் நீங்கள் செய்யும் மசால் வடையில் சேர்த்தால் போதும். மசால்வடை அசத்தலான சுவையில் அட்டகாசமாக இருக்கும்.

masalvadai
- Advertisement -

காலம் காலமாக நமது வீடுகளில் செய்யக்கூடிய மெது வடை மற்றும் மசால் வடை இவை இரண்டுமே மிகவும் சுவையானதாகவும், விருந்தில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். சாமி கும்பிடுவதாக இருந்தாலும், நமது முன்னோர்களுக்கு பூஜை செய்வதாக இருந்தாலும் இதுபோன்ற எந்த ஒரு காரியத்திலும் இலை போட்டு சாப்பாடு போடுவதென்றால் அதில் நிச்சயம் இந்த வடை இடம் பெற்றிருக்கும். என்னதான் அனைவரும் ஒரே மாதிரியாக வடை செய்தாலும் சிலர் கைப்பக்குவத்திற்கென்று தனி சுவை இருக்கும். அவ்வாறு தனி சுவையுடன் மசால் வடை எப்படி செய்வது என்பதை பற்றியும் அதற்கான ரகசிய பொடி எப்படி தயார் செய்வது என்பது பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

murungai-poo-vadai

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 2, சோம்பு – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 6 பல், உப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் கடலை பருப்பை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் தண்ணீர் சேர்த்து இரண்டு முறை நன்றாக கழுவிவிட்டு, மீண்டும் தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்துவிட வேண்டும். நன்றாக ஊறிய கடலை பருப்பில் இருந்து ஒரு ஸ்பூன் பருப்பை தனியாக எடுத்து வைத்து மீதமுள்ள பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

kadalai-paruppu

பின்னர் இரண்டு பெரிய வெங்காயத்தை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று பச்சை மிளகாயையும், காய்ந்த மிளகாயையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையையும் பொடியாக நருக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் பூண்டை சிறிய உரலில் சேர்த்து நன்றாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சியை பொடியாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மசால் வடை ரகசிய பொடி:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடை நன்றாக சூடானதும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும் பின்னர் குறித்து சோதனை அறியில் உடலில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மிளகு சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடி சேர்த்து செய்யும்போது மசால் வடை மிகவும் சுவையாக இருக்கும்.

sombu 2-

அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள கடலை மாவு மட்டும் தனியாக எடுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு அனைத்தையும் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, தட்டி வைத்துள்ள பூண்டு, துருவி வைத்துள்ள இஞ்சி மற்றும் பொடித்து வைத்துள்ள சோம்பு, மிளகு பொடி இவை அனைத்துடன் இறுதியாக அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

vadai

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்றாக அழுத்தி அதன் பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு மீதமுள்ள அனைத்து மாவிலும் வடை சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மசால்வடை தயாராகிவிட்டது. இங்கு கூறப்பட்டுள்ள ரகசிய பொடி வைத்து இந்த மசால் வடையை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள். எப்போதும் நீங்கள் சாப்பிடும் சுவையை விட அசத்தலாக இருக்கும்.

- Advertisement -