மாசி மாத தேய்பிறை ஏகாதேசி விரத முறை

perumal1
- Advertisement -

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி தான் விசேஷம் என்றும், மாசி மாதம் சிவபெருமானுக்கு மட்டும் உரிய மாதம் என்றும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அப்படி கிடையாது. மாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. மாசி மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி இரண்டுமே சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஏகாதேசியில் விரதமர்ந்து பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் இருக்கு. நாளைய தினம் அதாவது 06-03-2024 ஆம் தேதி மாசி மாதத்தின் தேய்பிறை ஏகாதசி திதி வரவிருக்கின்றது. பொருளாதாரத்தில் மென்மேலும் உயர, கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர, நாளை செய்ய வேண்டிய பெருமாள் வழிபாட்டை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மாசி மாத தேய்பிறை ஏகாதசி வழிபாடு

இந்த மாசி மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியை ஷட்திலா ஏகாதசி என்று சொல்லுவார்கள். இந்த ஏகாதசி அன்று நீர் நிலைகளில் புனித நீராடி எள் தானமாக கொடுத்தால் செய்த பாவங்கள் தீரும். புண்ணியங்கள் சேரும். வாழ்க்கையில் வறுமை நீங்கும் என்பது ஐதீகமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டினை ஆண்கள் பெண்கள் இரு பாலருமே செய்யலாம்.

இது தவிர கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போக பொருளாதாரத்தில் முன்னேற வறுமை நீங்க, இந்த தேய்பிறையை ஏகாதசியில் பெருமாளை நினைத்து வீட்டில் இருந்தபடியே எப்படி விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்வது. நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை எழுப்பி விரதத்தை தொடங்குங்கள்.

- Advertisement -

விரதம் இருப்பது என்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது. பால்பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். ஒருவேளை பலகாரம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். எதுவும் சாப்பிடாமலும் விரதம் இருக்கலாம். மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் ஒரு சிறப்பான விளக்கை ஏற்ற வேண்டும். பெருமாள் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

ஒரு தாம்பூல தட்டு நிரம்ப துளசி இலைகளை பரப்பி அதன் நடுவே அகல் விளக்கு வைத்து, சுத்தமான பசு நெய் ஊற்றி, இரண்டு ஏலக்காய் அதில் போட்டு பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த விளக்கின் முன்பாக அமர்ந்து பெருமாளிடம் நீங்கள் கேட்கும் வரங்களை உடனே பெறலாம். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் அகல் விளக்கின் வெளிச்சம், அந்த துளசி இலைகள் மீது படும்போது, உங்களை சுத்தி நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.

- Advertisement -

இந்த சமயம் பெருமாள் கிட்ட என்ன கேட்டாலும் அது உடனே கிடைக்கும். பெருமாளிடம் மனம் உருகி எவ்வளவு பணம் காசு, எவ்வளவு செல்வ வளம், வேண்டுமோ கேளுங்கள். நிச்சயம் பெருமாள் உங்களுக்கு தேவையான செல்வ வளத்தை வாரி கொடுத்து விடுவார். இந்த பூஜையில் பெருமாளுக்கு உகந்த அவல் பாயசம் நெய்வேத்தியமாக வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இதையும் படிக்கலாமே: 5.3.2024 இன்று வாஸ்து நாள் வழிபாடு

வேண்டுதல் எல்லாம் முடித்துவிட்டு தீப தூப ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் பெருமாளுக்கு வைத்த பிரசாதத்தை சாப்பிட்டு உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் நம்பிக்கையுடன் இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -