முன்நெற்றியில் வகிடு தெரியும் அளவிற்கு முடி கொட்டி விட்டதா? எந்த பக்கம் வகிடு எடுப்பது என தெரியாமல் திணறும் அளவிற்கு அடர்த்தியாக முடி வளர எதையும் தேடாதீங்க, இதை மட்டும் செய்யுங்க!

hair-fall-image
- Advertisement -

தலைமுடி அதிகம் உதிர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எப்போது அறிவோம் தெரியுமா? முன்நெற்றியில் வகிடு பகுதியில் ஸ்கேல்ப் தெரியும் அளவிற்கு வரும் பொழுது தான் நமக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறது என்கிற ஒரு உணர்வு வருகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, ஸ்கேல்ப் தெரியாத அளவிற்கு தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு நாம் எதையும் இனி தேட வேண்டியது இல்லை, இதை மட்டும் செய்தாலே போதும். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக ஆண்களாக இருந்தால் முடி உதிரும் பொழுது அவர்களுக்கு எளிதாக தெரிந்து விடும். ஏனென்றால் அவர்களுடைய முடிவின் அளவு மிகக்குறுகியதாக இருப்பதால் அளவுக்கு அதிகமாக முடி கொட்டும் பொழுது அவர்களால் அதை உணர முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, நீண்ட கூந்தல் உடைய பெண்களுக்கு சாதாரணமாக உதிர்வது போல முடி உதிர்கிறது என்று தான் தோன்றும். ஆனால் முன்நெற்றியில் வகிடு எடுக்கும் பொழுது நாளுக்கு நாள் அது பெரிதாகிக் கொண்டே இருக்கும். முதலில் அந்த இடத்தில் தான் முடியானது அதிகமாக உதிர்கிறது.

- Advertisement -

ஸ்கேல்ப் பகுதி தெரிய ஆரம்பித்து விட்டாலே, நமக்கு பிரச்சனை ஆரம்பித்து விடும். தலைமுடியின் அழகே அடர்த்தியில் தான் இருக்கிறது. நீண்ட கூந்தல் இல்லை என்றாலும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று தான் பெரும்பாலானவர்கள் விருப்பமாக இருக்கும். எனவே இந்த அடர்த்தியான முடியை மீண்டும் அந்த இடத்தில் வளர செய்து வகிடு மறையும் அளவிற்கு தலைமுடி வளர நாம் என்ன செய்யலாம்?

எப்போதுமே தலைமுடியின் ஆரோக்கியம் இயற்கையான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே இயற்கையாக தலைமுடிக்கு எந்தெந்த பொருட்கள் சிறந்தது? என்பதை நம் முன்னோர்கள் வழி வகுத்து சென்றுள்ளனர். அந்த பொருட்களை மட்டும் பயன்படுத்தி ஒரு மூன்று மாதத்திற்கு இதை செய்து பாருங்கள், கண்டிப்பாக முன்நெற்றியில் முடி உதிர்வது நின்று அந்த இடத்தில் அடர்த்தியாக மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்.

- Advertisement -

தலை முடி உதிர்வு பிரச்சனையை தடுக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருள் செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூ ஆகும். எனவே ஒரு கைப்பிடி அளவிற்கு செம்பருத்தி இலை, ஒரு கைப்பிடி அளவிற்கு செம்பருத்தி பூவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு கற்றாழை ஜெல் நன்கு சுத்தம் செய்து கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் நான்கு சின்ன வெங்காயத்தை சேருங்கள். சின்ன வெங்காயத்தை நேரடியாக தலையில் வைத்து தேய்க்க கூடாது. எந்த வகையிலும் நேரடியாக பயன்படுத்தவும் கூடாது. எனவே சின்ன வெங்காயத்தை இப்படி சேர்த்து நீங்கள் பேஸ்ட் போல மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
2 வெள்ளை முடி எட்டிப் பார்க்கும்போதே ஹேர் டை தேடி ஓடாதீங்க. பிறகு சீக்கிரம் மொத்த முடியும் வெள்ளையாகிவிடும். எட்டிப் பார்த்த வெள்ளை முடியை கருப்பாக்க இந்த எண்ணெயை தடவினாலே போதும்.

பின்னர் இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் தடவி லேசாக மசாஜ் செய்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக ஷாம்பு போட்டு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். அவ்வளவுதான், இது போல வாரம் இரண்டு முறை ஆரம்பித்து படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து மூன்று மாதம் செய்து பாருங்கள், உங்களுக்கு பக்காவான பலன் கிடைக்கும்.

- Advertisement -