இந்த சிவப்பு நிற பருப்பு உங்களுடைய முகத்துக்கு 7 நாட்களில் நிரந்தரமான சிகப்பழகை தரும். அடையாளமே தெரியாத அளவுக்கு அழகு கூடும்ன்னா பாத்துக்கோங்க.

face1
- Advertisement -

அழகான சிகப்பழகு நிரந்தரமாக தேவை. அதுவும் மிக மிக குறைந்த நாட்களில் நம்மை பொலிவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. மிக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தான் இந்த ரெமிடியை நாம் தயார் செய்ய போகின்றோம். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், சுருக்கங்கள், கருவளையம், கருந்திட்டுக்கள், முகப்பருக்கள் இவைகளை எல்லாம் படிப்படியாக குறைக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய சருமத்தின் நிறத்தை படிப்படியாக பாலீஷ் போட்டது போல அழகாக வெள்ளையாக மாற்றும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த சுலபமான டிப்ஸை நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மைசூர் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன், பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன், போட்டு இந்த இரண்டு பொருட்களையும் ஒருமுறை கழுவி தண்ணீரை வடித்து விடுங்கள். பிறகு இந்த இரண்டு பொருட்களும் மூழ்கும் அளவிற்கு அதாவது ஒரு டம்ளர் அளவு நல்ல தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அரிசியும் பருப்பும் ஊறவைத்த இந்த தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் ஊற்றி கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் 7 நாட்கள் வரை இந்த ஸ்ப்ரே வை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். முகத்தில் மேக்கப் இல்லாத போது எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த ஸ்பிரேவை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 3 முறை இந்த ஸ்பிரேவை உங்களுடைய முகத்தில் போட்டுக்கொள்ளலாம். ஸ்பிரே செய்வதற்கு முன்பு பாட்டிலை நன்றாக குலுக்கி விட வேண்டும்.

- Advertisement -

வேலைக்கு செல்பவர்கள் இரவு வந்ததும் முகத்தை சுத்தமாக கழுவி துடைத்து விட்டு இந்த ஸ்பிரேவை முகத்தில் அடித்துக் கொண்டு அப்படியே தூங்கச் செல்லலாம். மறுநாள் காலை எழுந்து எப்போதும்போல முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இந்த மைசூர் டாலும் அரிசியும் சுலபமாக நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்கள் தான். வீட்டின் அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் முகத்திற்கு போடும் கிளிசரின் என்று கேட்டால் அங்கு கிடைக்கும். அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு கிளிசரினை முகத்தில் போடுவதற்கு விருப்பம் இல்லை என்றால் அந்த ஒரு பொருளை ஸ்கிப் செய்து விட்டு வெறும் அரிசி பருப்பு ஊறவைத்து தண்ணீரை மட்டும் முகத்தில் ஸ்ப்ரே செய்து வந்தால் கூட நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தொடர்ந்து 7 நாட்கள் இந்த ஸ்பிரேவை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து இந்த ஸ்பிரே தினம்தோறும் முகத்தில் அடித்து வரலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. சருமத்தை பராமரிக்க நேரமே இல்லை பியூட்டி பார்லருக்கு சென்று நிறைய காசு செலவு செய்ய முடியவில்லை என்பவர்கள் இந்த சிம்பிளான ரிமெடி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக உங்களுடைய முகத்தின் பொலிவு கூடும்.

- Advertisement -