தீராத மனக் கஷ்டத்தை ஆண்டவனிடம் முறையிடும் போது உங்கள் கையில் இந்த 1 பொருளை வைத்துக் கொள்ளுங்கள். இறைவன், உங்களுக்கு ஆறுதல் சொல்வதை ஆத்ம ரீதியாக உங்களால் உணர முடியும்.

prayer
- Advertisement -

தீராத கஷ்டத்தில் நாம் இருக்கும் போது யாராவது ஒருவர் நமக்கு ஆறுதல் சொன்னால், அது நமக்கு மன வலிமையைக் கொடுக்கும். ஆறுதல் என்பது நமக்கு இருக்கக்கூடிய மனவேதனைக்கு வலிக்கு, மருந்து போட்டு விட்டது போல் சுகமாக இருக்கும். ஆனால் எல்லா கஷ்டத்திற்கும் மனிதர்களிடமிருந்து நம்மால் ஆறுதலை எதிர்பார்க்க முடியாது. சில கஷ்டங்களை இறைவனிடம் தான் சொல்லி ஆக வேண்டும். அப்படி உங்களுடைய துயரங்களை இறைவனிடம் முறையிடும் போது உங்களுடைய கைகளில் இந்த ஒரு பொருளை வைத்துக் கொண்டு, இந்த முறைப்படி இறைவனிடம் உங்களை கஷ்டங்களை சொல்லி பாருங்கள்.

mayilaragu1

இந்த ஒரு பொருள் உங்களுக்கும் இறைவனுக்கும் பாலமாக அமையும். இறைவனது ஸ்பரிசம் உங்கள் மேல் விழுந்து அந்த இறைவன் உங்களுக்கு ஆறுதல் சொல்வதை மனதார உங்களால் உணர முடியும். தெய்வீக சக்தி நிறைந்த அந்த ஒரு பொருள் என்ன.

- Advertisement -

இறையருள் நிறைந்த, பரமாத்மாவுக்கு மிகவும் பிடித்த மயில் இறகு தான் அந்த பொருள். எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக இந்த மயிலிறகு இருக்க வேண்டும். 6 மயில் இறகுகளை வாங்கி ஒரு சிறிய நூல் போட்டு கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதை எப்போதும் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும்.

இறைவனிடம் உங்களது கஷ்டங்களையும் துயரங்களையும் முறையிடும் போது, அந்த மயிலிறகை உங்களது கையில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு இறைவனிடம் உங்களது கஷ்டங்களை கூறுங்கள். உங்கள் கையில் இருக்கும் மயிலிறகால் இறைவனின் திருவுருவப் படத்திலிருக்கும் பாதங்களைத் தொட வேண்டும். அப்படி தொடும் போது இந்த மயிலிறகு உங்களுக்கும் இறைவனுக்கும் ஆத்ம ரீதியாக ஒரு பாலத்தை உண்டுபண்ணும்.

- Advertisement -

கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் வேண்டுதல் வைக்கும்போது நிச்சயமாக அந்த இறைவன் உங்களுடைய மனக்கண்களில் தோன்றி உங்களுக்கான ஆறுதலை தெரிவிப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மனதை அமைதிப்படுத்தி கொண்டு அமைதியான சூழ்நிலையில் பூஜை அறையில் இதை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் இறைவன் இருப்பதை உங்களால் உணர முடியும்.

pray

உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கு உயிர் உண்டு. நமக்கு மேல் ஒரு சக்தி கட்டாயம் உள்ளது. அதனால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் முழு நம்பிக்கையோடு உங்கள் வீட்டு பூஜை அறையில் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினால் நிச்சயமாக இறைவனை உங்களால் உணரமுடியும். குறிப்பாக இக்கட்டான கஷ்டம் வரும் சமயத்தில் உங்கள் கண் கலங்க, தூரத்தில் நிற்கும்போது மனதார இந்த முறையை, முழு நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். பலனை உடனடியாக பெறுவீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -