மயில் தோகை ரகசியங்கள்

mayil eraku
- Advertisement -

தெய்வீக அம்சம் கொண்ட பொருட்களை நம் வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் தெய்வீக அருள் நமக்கு கிடைக்கும் என்பது பலரும் அறிந்த உண்மையே. அதனால்தான் நம்முடைய இஷ்ட தெய்வங்களுக்குரிய தெய்வீக பொருட்களை கண்டறிந்து அதை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவோம். அந்த வகையில் மயில் தோகையை எந்த கிழமையில் எப்படி வாங்கி வைத்து வழிபட்டால் நம் வாழ்வில் நல்ல நிலைக்கு வர முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

முருகப்பெருமானின் வாகனமாக திகழக்கூடியது மயில். அதே சமயம் கிருஷ்ண பரமாத்மா தன் தலையில் சூடிக் கொண்டு இருப்பதும் மயிலிறகு தான். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவும் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கும் உகந்த பொருளாக தான் இந்த மயில் தோகை திகழ்கிறது. பொதுவாக மயில் தோகை என்பது எதிர்மறை ஆற்றல்களை விளக்கி நேர்மறை ஆற்றல்களை தரக்கூடிய வல்லமை படைத்தது.

- Advertisement -

இன்றும் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு மயில் தோகையை வைத்து வீசுவார்கள் அதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும் என்று பொருள்படும். அப்படிப்பட்ட தெய்வீக அம்சம் பொருந்திய மயில் தோகையை நம் வீட்டில் வைப்பதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும், நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும், தன வரவு ஏற்படும், புத்திர பாக்கியமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த பாக்கியங்களை பெறுவதற்கு எந்த முறையில் மயிலிறகை பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். பொதுவாக மயில் இறகை நாம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையில் தான் வாங்கி வந்து வீட்டில் வைக்க வேண்டும். வீட்டில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாராவது இருந்தால் அவர்கள் கையால் மயில் இறகை வாங்கி வந்து வீட்டில் வைப்பது மிகவும் உத்தமமான செயலாக கருதப்படுகிறது.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கு மயில் இறகை நாம் அப்படியே வைப்பதை விட ஒரு செம்பு நிறைய பச்சரிசியை நிரப்பி அதில் மயில் இறகை குத்தி வைக்க வேண்டும். இப்படி நாம் பூஜை அறையிலோ அல்லது வரவேற்பு அறையிலோ வைத்தோம் என்றால் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் உத்தரகிக்கப்படும். இதில் இருக்கக்கூடிய பச்சரிசியை அமாவாசை, பௌர்ணமி நாட்களில் எறும்பு புற்றிற்கு தானமாக தந்து விட வேண்டும்.

தன வரவு அதிகரிப்பதற்கு நாம் நம் வாழ்க்கையில் குருவாக யாரை நினைக்கிறோமோ படிப்பு சொல்லிக் கொடுத்தவராகவும் இருக்கலாம், தொழிலை சொல்லிக் கொடுத்தவராகவும் இருக்கலாம், ஆனால் நம் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை பிடித்த குருவின் தகுதி உடைய ஒருவரிடம் மயில் தோகையை வாங்கிக் கொடுத்து பிறகு அவரிடம் இருந்து வாங்கி வந்து வீட்டில் வைத்தோம் என்றால் வீட்டில் தன வரவு என்பது அதிகரிக்கும். அவர்களுக்கும் நாம் மயில் தோகையை தானமாக தரலாம்.

- Advertisement -

புத்திர பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் தங்களுடைய படுக்கை அறையில் மயில் தோகையை வாங்கி வைப்பதன் மூலம் விரைவிலேயே புத்திர பாக்கியம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் வேரோடு அழிய மகாலட்சுமி பரிகாரம்

மயில் தோகையை வாங்கி வைத்தால் போதும் அனைத்து பிரச்சினையும் நீங்கிவிடும் என்று நினைக்காமல் அதற்குரிய வழிமுறைகளை பின்பற்றி நம் வாழ்வில் நல்ல ஒரு உயரிய நிலையை அடைவோம்.

- Advertisement -