பணக்கஷ்டம் வேரோடு அழிய மகாலட்சுமி பரிகாரம்

mahalashmi1
- Advertisement -

நமக்கு இருக்கும் பண கஷ்டத்தை வேரோடு அழிக்க வேண்டும். நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் பணக்கஷ்டம் வரக்கூடாது. பணத்தின் அருமை பெருமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அந்த பணம் இல்லையே, என்று வருத்தப்படும் அளவுக்கு ஒரு நாளும் நம் குடும்ப சூழ்நிலை மாறக்கூடாது, என்பவர்கள் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் தவறாமல் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள். உங்கள் குடும்பம் என்றைக்கும் பண கஷ்டம் இல்லாமல் செல்வ செழிப்போடு வாழும். அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

பணக்கஷ்டத்தை வேரோடு அழிக்கும் மகாலட்சுமி பரிகாரம்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலையில் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு போகணும். பெருமாள் கோவிலில் தாயார் சன்னிதி இருக்கும். அந்த தாயாருக்கு அபிஷேகம் செய்ய உங்கள் கையால் பசும்பால் வாங்கி கொடுங்கள். மிகக் குறைந்த அளவு 100ml பசும்பால் வாங்கி கொடுத்தாலும் அது உங்களுடைய சௌகரியம்.

- Advertisement -

உங்களுடைய நிதி நிலைமையை பொறுத்தது. 1/2 லிட்டர், 1 லிட்டர் வாங்கி கொடுத்தாலும் அது உங்களுடைய சௌகரியம். உங்கள் கையால் வெள்ளிக்கிழமை காலை, முதல் அபிஷேகத்திற்கு மகாலட்சுமி தாயாருக்கு பசும்பாலை வாங்கி கொடுங்க. அடுத்து தாயாருக்கு அலங்காரம் செய்யப்படும். பிறகு ஆரத்தி காண்பிப்பார்கள். அந்த காலை நேர தாயார் தரிசனத்தின் போது பச்சை நிறத்தில் ஏதாவது ஒரு பொருளை தாயாருக்கு வாங்கிக் கொடுக்கணும்.

தாயார் பாதங்களில் வைத்து அந்த பொருளை அர்ச்சனை செய்யணும். உதாரணத்திற்கு பச்சை குங்குமம், பச்சை வலையல் அல்லது பச்சை நிறத்தில் கயிறு. நீங்கள் எந்த பொருளை பயன்படுத்துவீர்கள் அதை வாங்கி கொடுங்க. தாயாரின் பாதத்தில் வைத்து அந்த பச்சை நிற பொருளை அர்ச்சனை செய்து, அர்ச்சகரியிடம் மீண்டும் அந்த பொருளை கேட்டு வாங்கிக்கோங்க.

- Advertisement -

அதைக் கொண்டு வந்து நீங்கள் தினமும் பயன்படுத்த வேண்டும் வளையலாக இருந்தால் பெண்கள் கையில் போட்டுக்கொள்ளலாம் பச்சை நிற குங்குமத்தை தினமும் ஏற்றுக் கொள்ளலாம். பச்சை நிற கயிறை கையில் கட்டிக் கொள்ளலாம். பச்சை நிறத்தில் எந்த அழகு சாதன பொருட்களாக இருந்தாலும் சரி, பெண்கள் அந்த பொருளை பயன்படுத்தி வர வேண்டும்.

அப்போது உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பானது செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. பச்சை நிற குங்குமம் என்றால் ஆண்கள் பெண்கள் இருபாலரும் வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் பச்சை நிற கயிறை வாங்கி வைத்து கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை ராகு கால அம்பாள் வழிபாடு

இப்படி இந்த சூட்சமத்தோடு வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை கும்பிட்டால் உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் வேரோடு அழைக்கப்படும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -