தொடர் மழையால் ஈரப்பதத்தின் மூலம் பாயில் பூசணம் பிடிக்கிறதா? திடீரென வெயில் வந்து விட்டால் துணி காய போட கிளிப் கூட பற்றவில்லையா? இதோ புது புது ஐடியா எல்லாம் உங்களுக்காக.

clip1
- Advertisement -

மழைக்காலம் வந்துவிட்டாலே வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பெரிய தலைவலி. அதில் ஒரு சில தலைவலிக்கு தீர்வு காண சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இனி தொடர்ந்து வரபோவது மழைக்காலம் தான். உங்களுடைய வீட்டில் தேவைப்படும் போது இந்த குறிப்புகளை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும்.

குறிப்பு 1:
முதலில் எல்லோர் வீட்டிலும் சுருட்டி வைத்திருக்கக் கூடிய பாயில் மழைக்காலத்தில் பூசணம் பிடிக்கும். அந்த பாயை பிரித்துப் பார்த்தால் பாய் முழுவதும் வெள்ளை வெள்ளையாக ஃபங்கஸ் வந்திருக்கும். மழையில் பாயை நன்றாக கழுவி காய வைத்தாலும் காயாது. என்ன செய்வது. பாயை சுருட்டி வைக்கும் போது அதன் உள்ளே நியூஸ் பேப்பரை விரித்து பாயை சுருட்டி வையுங்க. ஈரப்பதத்தை நியூஸ் பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும். உங்கள் வீட்டுப் பாயை தரையில் விரியுங்கள். அதன் மேலே எத்தனை நியூஸ் பேப்பர் வைக்க முடியுமோ பாயின் அளவுக்கு நியூஸ் பேப்பரை வைத்து விட்டு, பாயை சுருட்டி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிப்பு 2:
மழை பெய்து கொண்டே இருக்கும். போது திடீரென்று இடையில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் வெயில் வரும். வீட்டில் இருக்கும் ஈரமான எல்லா துணிகளை கொடியில் காய வைக்க வேண்டும் என்று நினைப்போம். நிறைய துணிகள் இருக்கும். கிளிப் பத்தாது. தலைக்கு பயன்படுத்தும் குஷி கிளிப், ஹாங்கிங் கிளிப், ஹேர் பின் இருக்கும் அல்லவா, அதை பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் அட்டை அட்டையாக வாங்கி வைத்திருப்பார்கள். அந்த கிளிப்பை கொண்டு போய் துணியின் மேல் கிளிப் போல பயன்படுத்திக் கொள்ளலாம். துணிகள் சீக்கிரம் கீழே விழாது. துணிக்கு போடும் கிளிப்பை விட இந்த கிளிப்பிங் விலை ரொம்ப ரொம்ப குறைவு. அவசரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு 3:
கூடுமானவரை இப்படி அடை மழை பெய்யும் போது மிதியடியாக மேட்டை பயன்படுத்தாதீங்க. மேட் தடிமனாக இருப்பதால் அவ்வளவு எளிதில் காயாது. வீட்டில் இருக்கும் பழைய காட்டன் நைட்டி காட்டன் துணிகளை சதுரமாக வெட்டிக்கொண்டு, நான்காக மடித்து, நான்கு பக்கத்திலும் ஏதாவது ஒரு கிளிப் போல போட்டு மேட் போல பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு புது சட்டை வாங்கும் போது அதில் சின்ன சின்ன கிளிப் கொடுப்பாங்க இல்லையா. பிளாஸ்டிக்கில் சொருகி இருக்கும். அந்த கிளிப்பை எடுத்து வைத்தால் கூட இந்த மேட் செய்ய நமக்கு பயன்படும். இப்படிப்பட்ட காட்டன் துணிகள் ஈரமாகிவிட்டால் கூட சீக்கிரமாக துவைத்து சீக்கிரமாக காய வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இருப்பினும் வாசலில், பாத்ரூமில் மேட் போட்டால் தான் வழுக்காமல் இருக்கும் என்பவர்கள் மேட் ரொம்பவும் ஈரமாகிவிட்டது என்றால், இரவு தூங்கச் செல்லும் போது ஒரு நியூஸ் பேப்பரை அந்த மேட்டுக்கு மேல், மேட்டுக்கு கீழ் போட்டு வையுங்கள். மேட்டில் இருக்கும் தேவையில்லாத ஈரப்பதத்தை அந்த நியூஸ் பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும்.

குறிப்பு 4:
மழைக்காலத்தில் நமக்கு இருக்கக்கூடிய இன்னொரு பிரச்சனை பவர் கட். உங்க வீட்ல இன்வெர்ட்டர் இருந்தால் கூட எப்போதுமே இரண்டு மெழுகுவத்தியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது ரொம்ப ரொம்ப நல்லது. வாங்கிய மெழுகுவர்த்தியை ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். ஃப்ரீசரில் வைத்து எடுத்து மெழுகுவர்த்தியை பற்ற வைக்கும் போது அது நமக்கு நீண்ட நேரம் நின்று எரியும்.

ஒரு சின்ன சில்வர் கிணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மெழுகுவர்த்தியை ஏற்றி அந்த கிண்ணத்துக்குள்ளே நிற்க வைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி வையுங்கள். இப்படி செய்தால் ஏற்றிய மெழுகுவத்தி சீக்கிரமாக உருகாது. நீண்ட நேரம் எரியும். குறிப்பு பிடிச்சவங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -