இந்த ஆண்டு 11ஆவது ஐ.பி.எல் போட்டிகள் துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. வழக்கமாக துவக்க விழா கோலாகலமாக நாடக்கும். ஆனால், இந்த ஆண்டு துவக்க விழா செலவினை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவத்தினர் குடும்பத்திற்கு அந்த தொகையை அளிக்க நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
தற்போது சென்னையில் நடைபெற இருக்கும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டிக்கான டிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்காக மார்ச் 16 ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதற்காக சென்னை அணியின் பேட்டிங் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹஸ்ஸி சென்னை வந்தடைந்தார். தற்போது அவர் சென்னை வந்தடைந்ததை சி.எஸ்.கே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
First day at the office it was for namma Mr. Cricket and the precious smile is back in town! #YelloveAgain #WhistlePodu ?? pic.twitter.com/cBhAYjJ0l2
— Chennai Super Kings (@ChennaiIPL) March 14, 2019
அவரின் வருகையை அடுத்து சி.எஸ்.கே வீரர்கள் தற்போது வழிப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஹஸ்ஸி அவர்களின் வழிகாட்டுதலின் படி சி.எஸ்.கே வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் நம்பலாம். எது எப்படி இருக்குமோ வரும் 23 ஆம் தேதியில் இருந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து என்றே கூறவேண்டும்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்