உச்சி முதல் பாதம் வரை மில்கி ஒயிட் கலராக தமிழ்நாட்டில் வைரலாகும் சூப்பர் ஃபேஸ் பேக். இத போட்டா 3 நாளில் நீங்க செம கலரா மாறிடுவீங்க.

face1
- Advertisement -

செம கலராக ஆகணும்னு ஆசை. ஆனா பியூட்டி பார்லருக்கு போகக்கூடாது. அதிகமாக செலவு செய்யக்கூடாது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குறைந்தபட்சம் 1 வாரத்திலிருந்து, அதிகபட்சம் 10 நாட்களுக்குள் ஒரு படி நம்மை கலராக மாற்றி விட வேண்டும் என்பவர்கள் எல்லோருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். மிக மிக சுலபமான முறையில் இந்த குறிப்பை பின்பற்றினால் நீங்கள் நிச்சயமாக மில்க்கி ஒயிட் கலருக்கு மாறுவது உறுதி அதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதலில் 2 உருளைக்கிழங்கு எடுத்து தோல் சீவி தண்ணீரில் கழுவி விட்டு நன்றாக துருவி பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பௌலில் இந்த சாறு அப்படியே இருக்கட்டும். டிஸ்டப் பண்ணாம அரை மணி நேரம் விட்டுடுங்க. தண்ணீர் ஊற்றி சாறு பிழிந்து எடுக்கக் கூடாது. (பிழிந்து எடுத்த உருளைக்கிழங்கு சாறில் அரை மணி நேரம் கழித்து மேலே தண்ணீர் தெளிந்திருக்கும். அதை கீழே தனியாக எடுத்து விட்டு, அடியில் திக்காக ஒரு ஸ்டார்ச் லேயர் இருக்கும். அதை மட்டும் நாம் குறிப்புகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.) தெளிவாக எடுத்த உருளைக்கிழங்கு சாறு முகம் கை கால்களில் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் விட்டு கழுவிக் கொள்ளுங்கள். அதிலும் சத்து இருக்கிறது.

- Advertisement -

அடுத்து ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் உளுந்து, 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசியை போட்டு காய்ச்சாத பாலை ஊற்றி நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். நான்கு மணி நேரம் அப்படியே ஊறட்டும். அதன் பின்பு அதை வெளியே எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாலோடு ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை ஒரு வெள்ளை காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். திக்காக நமக்கு ஒரு சாறு கிடைத்திருக்கும். அதில் உளுத்தம் பருப்பின் சத்தும் பச்சரிசியின் சத்தும் நிறைந்திருக்கும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறத்தில் வடிகட்டி வைத்திருக்கும் இந்த உளுந்து பச்சரிசி சாறை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து ஒரு கரண்டியை வைத்து விடாமல் கலந்து கொண்டே இருக்க ஐந்து நிமிடத்திற்குள் இது திக்கான பேஸ்ட் ஆக மாறிவிடும். அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும். இறுதியாக நாம் எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் இருக்கிறதல்லவா, அதையும் இதில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். கட்டியான பிறகு பேக் தயார்.

- Advertisement -

இதை ஒரு பவுலில் போட்டு கைவிடாமல் ஒரு விஸ்கை வைத்து அடித்தால் சூப்பரான கிரீம் தயாராகிவிடும். அவ்வளவு தாங்க. இதை ஒரு பாட்டிலில் போட்டு மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் பத்து நாட்கள் கெட்டுப் போகாது. தேவையான அளவு இந்த பேக்கை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ரொம்பவும் டிரை ஸ்கின் ஆக இருந்தால் இதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் ஊற்றி நன்றாக அடித்து கலந்து இதை உங்களுடைய முகம் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். கழுத்துப் பகுதிகளிலும் போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் அப்படியே மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். பிறகு உடனடியாக சோப்பு போடக்கூடாது. 5 மணி நேரம் கழித்துதான் சோப்பு போட வேண்டும். ஆகையால் இரவு இந்த குறிப்பை பின்பற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டும் என்றால் உடல் முழுவதும் சோப்பு போட்டு குளித்துவிட்டு அதன் பின்பு வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக்கை உடல் முழுவதும் பூசி அப்படியே பத்து நிமிடங்கள் விட்டுவிட்டு மீண்டும் மசாஜ் செய்து குளித்து வந்தால், உடல் முழுவதும் நீங்க வெள்ளையா மாறிடுவீங்க.

இதையும் படிக்கலாமே: நாட்டு மருந்து கடையில் இந்த ஒரு பட்டையை வாங்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி பாருங்கள், முடி காடு மாதிரி வளரும். முடி வளர வேறு எதையுமே நீங்கள் தேட வேண்டாம்!

உங்களுக்கு ட்ரை ஸ்கின் இல்லை நார்மல் ஸ்கின் என்றால் இந்த பேக்கை தயிர் சேர்க்காமல் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். (பேக் போடுவதற்கு சிரமமாக உள்ளது. கட்டியாகிவிட்டது என்றால் கொஞ்சம் ரோஸ் வாட்டர் சேர்த்து கூட இந்த பேக்கை கலந்து கொள்ளலாம்.) ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் இந்த பேக்கை போடலாம். ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கே இரண்டு நாளில் வித்தியாசம் தெரியும்.

- Advertisement -