பண வரவு அதிகரிக்க தீபம்

cash dheepam
- Advertisement -

இன்று யாரிடம் சென்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டாலும் அனைவரும் சொல்லும் முதல் பிரச்சனை பணம் ஆகத் தான் இருக்கும். ஏனெனில் இந்த பணமானது எவ்வளவு வந்தாலும் இன்றைக்கு போதாத ஒரு நிலை தான் ஏற்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பணவரவு இல்லாமல் எல்லாவற்றிலும் பணத்தடை இருப்பவர்களின் நிலைமை சற்று சிரமமானது தான்.

எல்லோரும் சம்பாதிக்கிறார்கள் அப்படியானால் எல்லோரிடமும் தாராளமாக பணம் வரவு இருக்க தானே வேண்டும். அது ஏன் சிலரிடம் மட்டும் இப்படி பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உழைத்தாலும் முன்னுக்கு வர முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்றெல்லாம் நிச்சயமாக நமக்கு யோசனை தோன்றும்.

- Advertisement -

பண ஈர்ப்பு, பண வசீகரத்தன்மை நம்மிடம் இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது சம்பாதிக்கும் பணம் நம்மிடம் தங்கி பெருக வேண்டும். அதற்கு பணம் ஈர்ப்பு தன்மை நம்மிடம் இருக்க வேண்டும். அந்த ஈர்ப்பு தன்மை உருவாக்கக் கூடிய ஒரு அற்புதமான தீபமுறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பண ஈர்ப்பை அதிகரிக்க கூடிய தீபம்

இந்த தீப வழிபாட்டிற்கு நாம் சில பொருட்களை வாங்க வேண்டும். அது குண்டு மஞ்சள், கிராம்பு, சந்தனாதி தைலம், கொட்டைப் பாக்கு இத்துடன் மல்லிகை மொட்டு. இதில் காம்புகளை நீக்கி மேலிருக்கும் மொட்டுப்பகுதி மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இப்போது இவற்றையெல்லாம் சேர்த்து அந்த எண்ணெய் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் சந்தனாதி தைலத்தை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள், கிராம்பு, மல்லிகை பூவின் காம்பு இவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நல்ல வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டும் அப்போதுதான் இதில் இருக்கும் பொருட்களின் சாறு அந்த எண்ணெயில் கலக்கும். இதை நேரடியாக அடுப்பில் வைத்து சூடு படுத்தாமல் வெயிலில் சூட்டில் இதை வைப்பது தான் சரியான முறை.

ஒரு வேளை உங்கள் வீட்டில் வெயில் வராது எனும் பட்சத்தில் இதை டபுள் வாயில் முறையில் சூடு படுத்தலாம் நேரடியாக அடுப்பில் வந்து சூடு படுத்தக் கூடாது. இந்த பொருட்களின் சாறுகள் இறங்கிய இந்த எண்ணெய் ஒரு பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். இந்த எண்ணையை பயன்படுத்தி தினந்தோறும் விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அப்படி விளக்கு ஏற்றும் போது அதில் கொட்டைப்பாக்கு சேர்த்து ஏற்றுங்கள். ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றும் பொழுதும் குலதெய்வத்தையும் மகாலட்சுமி தாயாரையும் மனதில் நினைத்துக் கொண்டு உங்களின் பண பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதில் சேர்த்து இருக்கும் பொருட்கள் அனைத்துமே பண ஈர்ப்பை அதிகரிக்க கூடியது தான். இந்த தீபத்தை வீட்டில் தொடர்ந்து ஏற்றும் பொழுது பணவரவு அதிகரிக்கும் வீண் விரயங்கள் கட்டுப்படும். அத்துடன் இதை சேர்த்து இருக்கும் பொருட்களுக்கு தெய்வ வசிகர தன்மையும் உண்டு.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நடக்க ராஜ வசியம் மந்திரம்

இதனால் தெய்வத்தின் அருளும் உங்கள் குடும்பத்திற்கு முழுவதுமாக கிடைக்கும். இந்த தீப பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -