நினைத்த காரியம் நடக்க ராஜ வசியம் மந்திரம்

lady manthriam
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தினம் தினம் போராட்டத்துடன் கடப்பது தன்னுடைய தேவைகள் நிறைவேற்றிக் கொள்ளவும் தன்னுடைய குடும்பத்தார்யுடை விருப்பங்களை நிறைவேற்றவும் தான். இதற்காகத் தான் சம்பாதிப்பது, பணம் சேர்ப்பது எல்லாம். அதுமட்டுமின்றி அதற்காக பிறரிடம் சென்று நாம் கைகட்டி அவமானப்பட வேண்டிய சூழ்நிலையும் அனுதினமும் சந்திக்கிறோம்.

இப்படியான சூழ்நிலையில் வாழக் கூடிய அனைவருமே நம்முடைய நிலை எப்பொழுது மாறும். நாமும் பிறரை போல் நல்ல நிலைமைக்கு எப்போது மாறுவோம். நம்முடைய பொருளாதார நிலையும் முன்னேற்றம் அடையாத என்ற ஏக்கம் இருப்பது நியாயம் தான். அவற்றை தீர்க்கக் கூடிய அற்புதமான ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நினைத்தது நடக்க மந்திரம்

நினைத்தது நடக்க மந்திரம் என்றவுடன் நாம் என்னவெல்லாம் நினைக்கிறோமோ அதை எல்லாம் இந்த மந்திரத்தை சொன்னால் நடந்து விடும் என்பது கிடையாது. நம்முடைய அதிகபட்ச தேவை நிறைவேற தான். நாம் நன்றாக வேலை செய்ய வேண்டும். பணவரவு இருக்க வேண்டும் குடும்பத்தாரும் நாமும் நிம்மதியாக இருக்க வேண்டும். இதுவே இன்றைய காலக்கட்டத்தில் பல குடும்பங்களில் எட்டா கனியாகத் தான் உள்ளது.

இந்தத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள நாம் பிறரிடம் கைகட்டி நிற்க வேண்டிய சூழ்நிலையோ நம்முடைய சுற்றத்தாரிடம் பொருளாதார நிலையில் பின் தங்கி இருந்தால் அவமானப்படக்கூடிய நிலையும் அனுபவிக்கிறோம். இவையெல்லாம் மாறி நாமும் நல்ல ஒரு பொருளாதார முன்னேற்றத்துடன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நம்முடைய கனவுகள் நினைவாகவும் இந்த மந்திர வழிபாடு துணை புரியும் உங்கள் முயற்சிவுடன் சேர்ந்து.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை செய்ய நாம் எந்த விரத முறைகளையும் கடைபிடிக்க வேண்டியது கிடையாது. உணவு கட்டுப்பாடு வேறு எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது .நீங்கள் எப்பொழுதும் எழுந்திருக்கும் நேரத்தில் எழுந்து பூஜை அறையில் ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டியது மட்டும் தான் அதுவும் பத்து நிமிடம் தொடர்ந்து சொல்ல வேண்டும் அதுதான் முக்கியம்.

மந்திரம்

ஓம் க்லிங் சர்வ ஜனமே
சர்வ கார்யம் மமவசம்
வசி வசி ஸ்வாக

இந்த மந்திரத்தை காலையில் 108 முறை சொல்ல வேண்டும் இந்த எண்ணிக்கையும் மிகவும் அவசியம். ஒரு நாள் முழுவதும் நமக்காக பாடுபட்டு எதுவும் நடக்காமல் போகும் விரக்தி ஆனவர்கள். இந்த மந்திரத்திற்காக 10 நிமிடம் அதுவும் நம்முடைய வாழ்க்கைக்காக செலவிடுவதில் எந்த தவறும் இல்லை. ஒவ்வொரு வழிபாட்டிலும் வழிபாட்டிற்குரிய தெய்வத்திற்கு மந்திரங்கள் நிச்சயமாக உண்டு. இதற்கு காரணம் நாம் ஒரு விஷயத்தை அப்படியே சொல்வதற்கும் மந்திரத்தின் வாயிலாக தெய்வத்திடம் கொண்டு போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இதையும் படிக்கலாமே: தெய்வ அருளை பெற விளக்கேற்றும் முறை

அந்த வகையில் இந்த மந்திரம் உங்களுடைய வேண்டுதல்களையும் கனவுகளையும் நிறைவேற்றி கொள்ளுங்கள். இனி நீங்கள் எதை நினைத்தாலும் நடக்கக் கூடிய யோகத்தை பெறக் கூடிய யோகக்காரர்களாக மாறுவீர்கள். இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்த நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -