பண வரவை அதிகரிக்க வசம்பு பரிகாரம்

money attraction
- Advertisement -

ஒரு குடும்பத்தில் பொருளாதார நிலைமை சீராக இருந்தாலே பல்வேறு பிரச்சனைகள் சரியாக விடும். இன்னும் சரியாக சொல்வதென்றால் பிரச்சனைகளே கூட வராது என்றே சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொருவரின் தேவையும் நிறைவேறாமல் போகும் போது தான் அங்கு மனக்கசப்புக்களும் தேவையில்லாத வாக்குவாதங்களும் சண்டைகளும் தோன்றுகிறது.

இந்த பணப் பிரச்சனையானது குடும்பத்தை மட்டுமல்ல வெளி வட்டாரத்தில் உள்ள உறவுகளையும், நண்பர்களையும் கூட பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்தகைய பணத்தடையை நீக்கி பண வரவை அதிகரிக்கும் ஒரு அற்புதமான எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணத்தடை நீக்கும் பரிகாரம்
பொதுவாக பணம் நம்மிடம் தங்க வேண்டும் என்றாலும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றாலும் இந்த இரண்டு விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். ஒன்று எதிர்மறை ஆற்றல் நம்மிடம் இருந்து முற்றிலுமாக விலக வேண்டும். மற்றொன்று பணத்தை ஈர்க்கும் தன்மை நம்மையும் நம்மை சுற்றியும் இருக்க வேண்டும். இரண்டையும் செய்யக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

பணத்தடையை நீக்கி பண வரவை அதிகரித்து கொடுக்க வசம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வசம்பிற்கு எதிர்மறை ஆற்றலை முழுவதுமாக நீக்கும் தன்மையும் உண்டு. இதை நாம் முறையாக பயன்படுத்தினால் நம்முடைய பணப்பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம். முதலாவதாக வசம்பை நாம் அடிக்கடி உள்ளுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதாவது வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ சிறிதளவு தேனில் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீராவதுடன் நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நமக்குள்ளேயே ஒரு வித ஜன வசியம், பண வசியத்தை ஈர்க்கும் தன்மை அதிகரிக்கும்.

அதே போல் நீங்கள் ஒரு முக்கியமான காரியமாக செல்வதாக இருந்தால் இந்த வசம்பை கொஞ்சமாக நெய்யில் தொட்டு நெருப்பில் காட்டினால் மை போல வரும். அதை நெற்றியில் இட்டுக் கொண்டு சென்றால் போகும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

அத்துடன் இந்த ஒரு பரிகாரத்தையும் செய்யுங்கள். ஒரு துண்டு வசம்பு ஒரு கொத்து அருகம்புல் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மாலையாக தொடுக்க வேண்டும். இந்த மாலையை உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பூஜை அறையில் வைக்க விருப்பமில்லாதவர்கள் நிலை வாசலில் வைக்கலாம் அல்லது வரவேற்பு அறையில் வைக்கலாம்.

எங்கு வைத்தாலும் இந்த வசம்பின் மணமானது உங்கள் வீட்டை சுற்றி இருக்க வேண்டும். அதே போல் விநாயகருக்கு உகந்த அருகம் புல்லானது நவகிரகங்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையை பெற்றிருக்கிறது. இவை இரண்டும் ஒன்று சேரும் பொழுது வீட்டில் இருக்கும் தீய சக்தி, கிரக கோளாறு போன்றவற்றை நீக்கி பணவரவை அதிகரித்து நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.

வசம்பு வெகு நாள் வரை காயாமல் அப்படியே இருக்கும். ஆனால் அருகம்புல் சீக்கிரத்தில் காய்ந்து விடும். ஆகையால் மாதத்திற்கு ஒரு முறை இந்த மாலை எடுத்து வசம்பை தனியாக எடுத்து விட்டு அருகம்புல்லை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மீண்டும் இதே போல் வைத்து அருகம்புல் சேர்த்து மாலையாக கட்டி வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தங்கம் அதிகமாக சேர திலகம்

இதை தொடர்ந்து செய்யலாம். வசம்பு எப்போது நிறம் மாறி மணம் போய் விட்டது என்று உணர்கிறீர்களோ அப்போது அதை மாற்றிக் கொள்ளுங்கள். பண ஈர்ப்பு மற்றும் ஜனவசியத்தையும், தீய சக்திகளையும் எதிர்க்கும் இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -