தங்கம் அதிகமாக சேர திலகம்

thangam sera
- Advertisement -

மனிதனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லக் கூடிய விஷயங்களில் ஒன்று தான் தங்க நகைகள். இந்த தங்க நகைகளை எவ்வளவு நாம் வைத்திருந்தாலும் மேலும் மேலும் வாங்கி குவிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கத் தான் செய்கிறது. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது.

தங்கம் இருப்பவர்களை இப்படி யோசிக்கும் போது தங்கம் இல்லாதவர்கள் என்ன நினைப்பார்கள். அவர்களும் ஒரு பொட்டு தங்கமாவது நம்மிடம் இருக்கக் கூடாதா? என்ற ஏக்கத்துடன் தானே இருப்பார்கள். இப்படியான ஏக்கங்களையும் தங்கம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேற்றக் கூடிய எளிய ஒரு பரிகார முறையில் தான் இப்போது நாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தங்கம் அதிகமாக சேர பரிகாரம்
தங்க நகை அதிகமாக நம்மிடம் சேர வேண்டும் என்றால் முதலில் அந்த தங்கம் நம்மிடம் சேர்வதற்கு சொர்ண ஆகர்ஷண சக்தி இருக்க வேண்டும். அந்த சக்தியை அதிகரிக்க செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறை தான் இந்த பரிகாரம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு சுத்தமான சந்தனத்தை வாங்கிக் கொள்ளுங்கள். இது தெய்வீக பொருட்கள் விற்கும் கடைகளில் அல்லது நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்தது ஒரு வெள்ளி குங்குமம் சிமிழ் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த குங்குமச்சிமிழில் நீங்கள் வாங்கி வைத்த சந்தனத்தை முழுவதுமாக போட்டு நிரப்பி விடுங்கள்.

- Advertisement -

இந்த சந்தனத்துடன் வெற்றிலை, பாக்கு, பூ, பழம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு இவற்றையெல்லாம் பெரும்பாலும் பெருமாள் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அர்ச்சகர் இடம் சொல்லி பெருமாள் பாதத்தில் வைத்த சந்தனத்தை எடுத்து தர சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த சந்தனத்தை கொண்டு வந்து உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினந்தோறும் காலையில் குளித்து முடித்தவுடன் இந்த சந்தனத்தில் சிறிதளவு பன்னீரை சேர்த்து குழைத்து நெற்றிலும் கழுத்திலும் திலகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை வைக்கும் போது தங்கம் எனக்கு அதிகமாக சேர வேண்டும் என்று 11 முறை மனதார சொல்லுங்கள். இந்த சந்தனத்தை பெண்கள் மாத விலக்கான நேரத்தில் வைக்கக் கூடாது. அதே போல் ஆண்கள் பெண்கள் யாராயினும் அசைவம் சாப்பிட்ட அன்று இந்த சந்தனத்தை வைக்க கூடாது.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்புடன் வாழ மகாலட்சுமி மந்திரம்

தங்கத்தை அதிக அளவு நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய எளிய பரிகார முறை தான் இது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை அனுபவிக்கலாம்.

- Advertisement -