தெருக் கோடியில் இருப்பவர்களும் கோடீஸ்வராக மாறக் கூடிய யோகத்தை பெற இந்த மூன்று விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தாலே போதும். சுக்கிர பகவானும், குபேரரும் செல்வதிபதியாக கடைபிடித்த சூட்சும வழி.

mahalaskhmi white crystal
- Advertisement -

ஏழ்மையான சூழ்நிலையிலும் இருப்பவர்கள் பணக்காராய் வாழ வேண்டும் என்றால் அதற்கு அந்த செல்வத்திற்கு அதிபதியான தெய்வங்களின் அனுகிரகமும் ஆசீர்வாதமும் தேவை. அந்த வகையில் மகாலட்சுமி தாயார், குபேர, சுக்கிர பகவான் இவர்களின் அனுகிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் பணவரவானது நம்மை நோக்கி தாராளமாக வரும். நம்முடைய ஏழ்மை நிலை நிச்சயம் மாறும். இவர்களின் அனுகிரகம் கிடைக்கவும், பணம் நம் கையில் தாராளமாக புழங்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செல்வந்தாக செய்ய வேண்டியது
நம்மில் பலரும் பணம் வர வேண்டும் என ஒவ்வொரு பரிகாரமாக தேடித் தேடி செய்கிறோமே அன்றி, வரும் பணத்தை பணத்தை எப்படி தக்க வைத்து அதை பல மடங்கு பெருக்கி அதன் மூலம் முன்னேற முடியும் என்பதை பற்றி யோசிப்பது கிடையாது. எந்த ஒரு விஷயத்திற்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவமும், மதிப்பும் தான் நம்மிடம் அது தங்கிப் பெருகும். அதே போல தான் பணத்தையும் நாம் போற்றி வணங்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

- Advertisement -

பணம் நம்மிடம் தாராளமாக தங்க வேண்டுமெனில் முதலில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் வேண்டும். அதற்கு வீட்டில் தினமும் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையிலாவது கட்டாயமாக மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். அது மட்டுமின்றி வீட்டில் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்களை பெருமளவில் வாங்கி வைப்பது மிகவும் நல்லது.

அதே போல் வரும் பணத்தை நாம் அப்படியே வைக்கக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. பணத்தை நாம் அப்படியே வைத்தால் அது தங்கி விடும் அன்றி பெருகாது. நம்மிடம் வந்த பணத்தை தேவையான செலவுகளுக்கு மணம் கோணாமல் சந்தோஷமாக செலவு செய்ய வேண்டும். இப்படி செய்தாலே பணம் நமக்கு இரட்டிப்பாகி திரும்ப கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி கைக்கு வரும் பணத்தை பணமாக வைக்காமல் அதை வேறு வகையில் மாற்றி வைக்க வேண்டும். அதாவது நகை, நிலம், வீடு போன்ற சொத்துகளாக மாற்ற வேண்டும். பணத்தை எப்போதும் பணமாக தேக்க கூடாது.

- Advertisement -

வீட்டில் காலை மாலை விளக்கு ஏற்ற வேண்டும். இந்த விளக்கை பெண்கள் தான் ஏற்ற வேண்டும். அது மட்டும் இன்றி வீட்டில் பணம் வரும் பொழுது அதை பெண்கள் கையில் கொடுத்து வாங்குவது பணம் பல மடங்கில் பெருகி தங்கும். ஏனெனில் பணத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமி தாயாரே பெண் தான். இல்லத்தின் அரசி என்று குறிப்பிடுவதும் பெண்களை தான். எந்த வீட்டில் பெண்கள் கையில் பணத்தை கொடுத்து வாங்குகிறார்களோ அந்த வீட்டில் பணம் பெருகும்.

இவற்றை எல்லாம் விட முக்கியமான ஒன்று மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் பெற்ற அதே போல் பணத்தை பல மடங்கு ஈர்த்துக் தர கூடிய ஸ்படிகத்தை நாம் வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். இதை கன்னி மூலையில் வைப்பது பல மடங்கு விசேஷத்தை தரும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் குபேரரும் சுக்கிர பகவானும் இந்த ஸ்படிக லிங்கத்தை வைத்து வணங்கித் தான் அவர்களுக்குரிய செல்வாதிபதி பதவியை பெற்றார்கள் என்ற ஒரு ஐதீகம் உண்டு. ஆகையால் இந்த ஸ்படிகம் இருக்கும் இடத்தில் செல்வம் பல மடங்கு பெருகும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்காலமே: ஆண்டவனின் பரிபூரண அருள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால், இந்த வாசம் எப்போதும் உங்கள் பூஜை அறையில் வீசிக்கொண்டே இருக்கட்டும்.

நாம் அரும்பாடு பட்டு சம்பாதிக்கும் பணத்தை நல்ல முறையில் சேமித்து, சேமிப்பை நல்ல முறையில் முதலீடாக மாற்றி கொள்வது இவற்றுடன் தெய்வத்தின் அனுகிரகத்தை பெற தினம் பூஜை செய்வது தெய்வ அனுகிரகம் பெற்ற பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே பணம் நம்மிடம் தங்கி பெருகி, ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட படிப்படியாக முன்னேறி வாழ்க்கையில் செல்வந்தர் ஆகும் வாய்ப்பு எளிதில் கைப்பற்றலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -