ஆண்டவனின் பரிபூரண அருள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால், இந்த வாசம் எப்போதும் உங்கள் பூஜை அறையில் வீசிக்கொண்டே இருக்கட்டும்.

vinayagar-pray
- Advertisement -

சில பொருட்களில் இருந்து வெளிவரும் வாசம் எப்போதும் நேர்மறை ஆற்றலை நம்முடைய வீட்டில் கொடுத்துக்கொண்டே இருக்கும். நேர்மறை ஆற்றல் தான், இறை சக்தி. நல்ல நறுமணம் நிறைந்த இடத்தில் இறை சக்தி குடியிருக்கும். நம்முடைய வீட்டில் இறை சக்தி நிரந்தரமாக குடியேற வேண்டும் என்றால், எந்த மாதிரியான பொருட்களை பூஜையில் அறையில் வைத்தால் நல்லது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பதிவு தான் இது. பின் சொல்லக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் இறை சக்தி நிரம்பி இருக்கின்றது. நேர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கிறது. பின் சொல்லக் கூடிய எல்லா பொருட்களையும் ஒரே நாளில் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்தெந்த நாட்களில், எந்தெந்த பொருள் கிடைக்கிறதோ அதை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தாலே இறையருள் உங்களுடைய வீட்டில் நிறைவாக இருக்கும்.

இறை சக்தி நிரம்பிய பொருட்கள்:
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அரகஜா. புதுசாக சிலை வாங்கினாலும் சரி, அல்லது கும்பாபிஷேகத்திற்கு பிறகு சிலைக்கு சக்தி ஊட்டும் போதும் சரி, அந்த சிலையின் கண்களில் அரகஜா பூசப்படும். சுவாமிக்கு கண் திறப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா. அந்த சமயத்தில் அரகஜாவை சுவாமியின் கண்களில் வைத்து தான் இறை சக்தியை அந்த சிலைக்கு கொடுப்பாங்க. இந்த அரகஜாவிற்கு அத்தனை சக்தி. பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் திறந்தபடி அரகஜா வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இதனுடைய வாசம் உங்கள் வீடு முழுவதும் நிரம்பி ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக தாழம்பூ குங்குமம். இந்த வாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவுமே கிடையாது. வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது மகாலட்சுமிக்கு இந்த தாழம்பூ குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையறையில் இருக்கும் திருவுருவப்படங்களுக்கு சந்தனம் வைத்து அதன் மேலே இந்த தாழம்புக்கு குங்குமத்தை வைத்துப் பாருங்கள். உங்களுடைய வீட்டில் தெய்வக் கடாட்சம் அப்படி நிலைக்கும்.

அடுத்தபடியாக மல்லிகை பூ, செண்பகப்பூ, மல்லிகை பூவின் வாசம் கேட்கவே வேண்டாம். நாம் எல்லோருக்கும் தெரியும் அத்தனை மனம் கொண்ட பூ இது. எல்லா சுவாமிகளுக்கும் விருப்பமானது. செண்பகப்பூ, இதை தேவலோகப் பூ என்று சொல்லுவார்கள். இது எளிதாக கிடைக்காது. பூக்கடைகளில் சொல்லி வைத்து இரண்டு பூவோ மூன்று பூவோ உங்களால் முடிந்தவரை வாங்கி தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு வைத்தால் மிகவும் நல்லது.

- Advertisement -

மரிக்கொழுந்து, இது பச்சை நிறத்தில் இலைபோலத்தான் இருக்கும். ஆனால் இதனுடைய வாசம் தெய்வங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த வாசம் இருக்கக்கூடிய இடத்தில் தெய்வங்கள் நிச்சயம் தங்கும். இந்த மரிக்கொழுந்து கிடைத்தாலும் வாங்கி பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு வையுங்கள். உங்களுடைய வீட்டின் அருகில் கோவில் இருந்தால் அந்தக் கோவில்களுக்கு இந்த மரிக்கொழுந்து பூவை வாங்கிக் கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும். இறுதியாக பார்க்கப்போகும் பொருள் பச்சை கற்பூரம்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம் இவை அனைத்தும் கிடைத்து பணம் பல வழிகளில் உங்களை தேடி வர ஒரே ஒரு தாமரை மலரை இப்படி செய்த பிறகு பீரோவில் வைத்து விடுங்கள்.

சமீபத்தில் இந்த பச்சை கற்பூரத்தை பற்றி நாம் நிறைய விஷயங்களை படித்து தெரிந்திருப்போம். பச்சை கற்பூரத்திற்கும் இறை சக்தியை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. ஒரு சின்ன கிண்ணத்தில் திறந்தபடி பச்சை கற்பூரத்தை வைத்து வரவேற்பு அறையில் படுக்கையறை சமையலறை என்று உங்கள் வீட்டில் எல்லா இடத்திலும் வைத்து விட்டால் போதும். அதனுடைய வாசம் வீடு முழுவதும் நிரம்பி நல்ல இறை ஆற்றல் கொடுக்கும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க அதிகரிக்க இறை சக்தியும் அதிகரிக்கும். நம்முடைய குடும்பமும் சந்தோஷமாக லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும். மேல் சொன்ன இந்த தகவல்கள் உங்களுக்கு பயன்படும் படி இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -