பண வரவை தரும் கற்றாழை பரிகாரம்

aloe vera cash
- Advertisement -

கற்றாழை செடி பொறுத்த வரையில் உடல் ஆரோக்கியத்திற்கும் உடலை குளுமைப்படுத்தவும் பயன்படுத்தி வரும் ஒரு செடியாக மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி பணவரவு போன்றவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது பலரும் அறியாத தகவலாக இருக்கும்.

கற்றாழையை வீட்டில் வளர்ப்பதால் பலவிதமான நன்மைகளை பெற முடியும் என்று வாஸ்து நிபுணர்களும் சொல்கிறார்கள். பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியது கற்றாழை. இதை எப்படி வளர்த்தால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றத்தை பெறலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் கற்றாழை

வாஸ்துபடி இந்த கற்றாழை செடியை வீட்டின் மேற்கு பகுதியில் வைக்கும் போது நல்ல பலன்களை பெற முடியும். அதே போல் வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கற்றாழை செடி வளர்த்து வர குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் அதிகரிக்கும். மேற்கு திசையில் கற்றாழை செடி வளர்த்தால் பதவி உயர்வு வேலையில் நல்ல முன்னேற்றம் போன்றவை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பணவரவு அதிகரிக்க கற்றாழை செடி வீட்டு வாசல், பால்கனி எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம். ஆனால் இந்த கற்றாழை செடியை வடமேற்கு பகுதியில் வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் வீட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்காது என்பதோடு தேவையில்லாத பிரச்சனைகளும் வளரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

- Advertisement -

பண வரவிற்காக கற்றாழை செடி வளர்ப்பவர்கள் எந்த காரணத்திற்கு கொண்டும் அதை வெட்டக் கூடாது என்று சொல்லப்படுகிறது. புதன்கிழமையில் வீட்டில் பூஜை அறையில் ஒரு சோம்பில் தண்ணீர் எடுத்து வைத்து அதில் சோம்பு, சர்க்கரை, ஏலக்காய் போட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு வைத்து விடுங்கள். இது ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும். அடுத்த நாள் வியாழக்கிழமை அன்று இந்த தண்ணீரை கொண்டு போய் கற்றாழை செடிக்கு ஊற்ற வேண்டும்.

இந்த தண்ணீரை ஊற்றும் போது பணத்தடை நீங்க பணம் வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு ஊற்றுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது பணவரவு அதிகரிக்கும் என்று சொல்கிறது அதே போல் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். வராத பணம் கைக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அடகு வைத்த நகையை மீட்க வழிபாடு

பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கும் கற்றாழை செடியை இது போன்ற முறையில் வளர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யும் போது நல்ல முன்னேற்றத்தை பெறலாம் இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -