மணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா?

Money plant
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் செல்வம் பெருக பலர் வாஸ்து சாஸ்திரத்தை மேற்கொள்கிறார்கள். வாஸ்து படி இவற்றை செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Money plant

மணி ப்ளான்ட் செல்வ வளத்தை பெருக செய்யும் ஆனால் நீங்கள் அதை எவ்வாறு கவனித்து கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்பதிவில் மணி ப்ளான்டை வாஸ்துப்படி எப்படி வளர்ப்பது? பராமரிப்பது? என்பதை பார்ப்போம்.

- Advertisement -

1. தென்கிழக்கு திசையில் அமைக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரப்படி அவை உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும். இது செல்வ செழிப்பை உண்டாக்கி, எதிர்மறை சக்தியை விலக்கி வைக்கவும் உதவுகிறது.

2. தண்ணீர் ஊற்றும் முறை.
உலர்ந்த மற்றும் வாடிய மணி ப்ளாண்ட் துரதிர்ஷ்டத்தை தரும். எனவே அதன் இலைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உலரவோ அல்லது வாடிவிடவோ கூடாது. அதன் இலைகள் தரையைத் தொடாமல் இருக்க வேண்டும். அதன் தண்டுகள் மற்றும் இலைகள் வாடிவிட்டால் அல்லது வறண்டுவிட்டால் அவற்றை கத்தரிக்கவும்.

- Advertisement -

money plant

3. கிழக்கு-மேற்கு திசையில் ஒருபோதும் வைக்க கூடாது.
உங்கள் மணி பிளான்ட் கிழக்கு-மேற்கு திசையில் வைத்திருப்பது வீட்டிற்கு பிரச்சினைகளை அளிக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் வாதங்களுக்கும், குழப்பமான தருணங்களுக்கும் வழிவகுக்கும். எனவே இந்த திசையில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

4. வீட்டிற்குள் வளர்க்கலாம்.
மணி பிளான்ட் பொறுத்தவரை வீட்டிற்க்கு வெளியில் வைப்பதை விட வீட்டிற்க்கு உள்ளே வைத்து வளர்ப்பது சிறந்த பலனை அளிக்கும். ஒரு தொட்டியில் அல்லது கண்ணாடி குவளையில் வளர்க்கலாம்.

- Advertisement -

5. வீட்டின் நுழைவுவாயில் வடக்குப் பகுதியில் வைக்கலாம்.
நுழைவுவாயிலின் வடக்கில் வைத்தால் புதிய தொழில் ஆதாரங்களையும், வாய்ப்புகளையும் அள்ளி கொடுக்கும். நல்ல அதிர்ஷ்த்தை தரும்.

6. பச்சை நிற தொட்டியில் அல்லது நீல நிற பாட்டிலில் வைக்கலாம்.
மணி பிளான்டை பச்சை நிற தொட்டியில் அல்லது நீல நிறம் கொண்ட பாட்டிலில் வைத்தால் அதிக செல்வத்தை வாரி வழங்கும். அதன் பின்னணியில் அழகிய ஓவியத்தை பயன்படுத்தலாம் அது நேர்மறை எண்ணங்களை மேலோங்க செய்யும்.

money plant

7. இடையூறு இல்லாத இடம் வேண்டும்.
வீட்டில் மூலையில் வைக்கும் போது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு சென்று வர இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான இட வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

8. பசுமையான இலைகள்.
உங்கள் மணி பிளான்ட் பசுமையான இலைகள் தான் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பசுமையான இலைகள் தான் செல்வ வளத்தை பெருக செய்யும்.

9. வறண்ட இலைகளை மற்றவர்கள் வெட்ட விடாதீர்கள்.
இலைகள் வறண்டு போகும் போது அதனை நீங்கள் தான் வெட்டிவிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள், அயலர்கள் வெட்டினால் கூட நீங்களே உங்கள் செல்வத்தை அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அர்த்தமாகிறது. எனவே உங்கள் கையால் நீங்களே வறண்டு போன இலைகளை கத்தரித்து விடவும்.

money plant

10. தொட்டியின் கொள்கலன் பெரிதாக இருக்க வேண்டும்.
நீங்கள் பெரிய தொட்டியை தேர்வு செய்தாலும் அதன் கொள்கலன் அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் மணி பிளான்ட் வெவ்வேறு விதங்களில் வளர கூடியவை.

11. மண்ணை சரிபார்க்கவும்.
எந்த வகையான மண் சரியானது என்று தோட்டக்காரர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். காற்றோட்டமான மண் மணி பிளான்டிற்கு உகந்தது என்று கூறப்படுகிறது.

மணி ப்ளான்ட் பொறுத்த வரையில் வீட்டில் இருக்கும் சாதாரண உரத்தையே பயன்படுத்தலாம். சுத்தமான நீராக இல்லாவிடில் இலைகள் சற்றே மஞ்சள் நிறமாக மாறக்கூடும். பாதி வெயிலில் வைத்தால் போதுமானது.

மணி ப்ளான்டிற்கு அதிகளவு மெனக்கெட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுலபமாக வாஸ்து படி பராமரித்து செல்வ வளத்தை பெருக செய்யுங்கள்.

- Advertisement -