பணம் சேமிப்பாக உயர பரிகாரம்

money saving
- Advertisement -

பணம்தான் ஒருவருடைய வாழ்க்கையை நிர்ணயிக்க கூடிய பொருளாக திகழ்கிறது. இந்த பணத்தை வைத்து தான் ஒருவருக்கு தேவையானவற்றை பெற முடியும். அப்படிப்பட்ட பணத்தை நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் ஒரு சிலரால் அந்த பணத்தை சேர்த்து வைக்க முடியாத அளவிற்கு செலவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சொல்லப்பட்ட பரிகாரத்தை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் அவர்களுக்கு சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும்.

ஒருவருடைய வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரின் அருளும், சுக்கிர பகவானின் அருளும், குரு பகவானின் அருளும் தேவைப்படும். இப்படி இவர்கள் மூவரின் அருளையும் பரிபூரணமாக பெற்றவர்களுடைய கையில் பணம் புரண்டு கொண்டே இருக்கும் என்று தான் கூற வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு உழைத்து கையில் பணம் வந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் செலவாய்க் கொண்டு இருக்கிறது என்ற வருத்தப்படுபவர்கள் இவர்கள் மூவரின் அருளையும் பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தைச் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் செய்வது சிறப்பு. வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்தில் ஒரு கைப்பிடி பச்சரிசி, ஒரு கைப்பிடி வெள்ளை கொண்டை கடலை, ஒரு கைப்பிடி துவரம் பருப்பு இவை மூன்றையும் வைத்து மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விட வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரத்தையோ அல்லது மந்திரத்தையோ கூறி பணம் அதிக அளவில் சேமிப்பாக உயர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வேண்டிய பிறகு பச்சை அல்லது மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் தாம்பாளத்தில் வைத்திருக்கும் மூன்று பொருட்களையும் கொட்டி ஒரு மூட்டையாக கட்டி அந்த மூட்டைக்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மூட்டைக்கு சாம்பிராணி தூபம் காட்டிவிட்டு நாம் எந்த இடத்தில் பணத்தை சேமித்து வைக்கிறோமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும் பொழுது ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டுவோம் அல்லவா? அப்பொழுது இந்த மூட்டைக்கும் காட்ட வேண்டும்.

- Advertisement -

தொடர்ந்து 48 நாட்கள் அதே இடத்தில் இருக்கட்டும். 48 நாட்கள் முடிந்த பிறகு வரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று இதில் இருக்கக்கூடிய பொருட்களை ஓடுகின்ற நீரிலோ அல்லது கால் படாத இடத்திலோ, எறும்பு புற்று இருக்கும் இடத்திலோ, போட்டுவிட்டு மறுபடியும் புதிதாக இதே பரிகாரத்தை செய்து வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி, குரு பகவான் மற்றும் சுக்கிர பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். சேமிப்பிற்காக எடுத்து வைத்த பணம் நம் கையை விட்டு நீங்காமல் அதே சமயம் அதிக அளவில் பணம் சேர்வதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். வீண் விரயங்கள் எதுவும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: செலவான பணம், மீண்டும் நம் கைக்கு வருமானமாக வர சொல்ல வேண்டிய மந்திரம்

அனைவரின் சமையலறையிலும் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களை வைத்து முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து நம்முடைய சேமிப்பு பணத்தை அதிகரித்துக் கொள்வோம்.

- Advertisement -