சகல தோஷங்களும், சகல துன்பங்களும், உங்கள் வீட்டை கண்டு பயந்து அஞ்சி தூர ஓடிவிடும். இந்த 2 பச்சை நிற இலைகள் உங்கள் வீட்டில் இருந்தால்.

sad-men-astro-wheel
- Advertisement -

இந்தப் 2 பச்சை நிற இலைகள் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயமாக பசுமையாக மாறும். எந்த ஒரு தோஷங்களும் எந்த ஒரு கிரக நிலைகளும் உங்களுக்கு பெரிய துன்பத்தை கொடுக்காது. அதற்காக எனக்கு கஷ்டமே வராதா? நான் கடவுள் போல வாழலாமா என்று பேராசைப்படாதீங்க. மனிதர்களுக்கு எப்போதுமே பேராசை கூடாது.  வரக்கூடிய துன்பங்களில் நமக்கும், நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. எந்த ஒரு பேரிழப்பும் இல்லாமல் வாழ்க்கையை சுமுகமாக நடத்தி செல்ல இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

இந்த பரிகாரத்திற்க்கு நமக்கு இரண்டு மூலிகை செடிகள் தேவை. ஒன்று குப்பைமேனி செடி, இரண்டாவது அம்மான்பச்சரிசி. இந்த இரண்டும் வேரோடு நமக்கு தேவை கிடையாது. வேர் இல்லாமல் மேலே லேசாக சிறிய கிளையை மட்டும் பறித்து எடுத்து வந்தால் போதும். நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த இரண்டு செடியையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்‌. அப்படி இல்லை என்றால் நீங்களே இந்த செடியை பறிப்பதாக இருந்தால் செடியை பறிப்பதற்கு முன்பு ‘நசிநசி மூலிகை சாபம் நசி’ என்ற வார்த்தையை சொல்லி விட்டு அதன் பின்பு செடியிலிருந்து சிறிய கிளையை உடைத்து வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

- Advertisement -

இந்த இரண்டு செடியையும் லேசாக மஞ்சள் தண்ணீர் போட்டு கழுவி விடுங்கள். அதன் பின்பு இதை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு இதன் மேலே ஒரு வெள்ளைத் துணியை மூடி அப்படியே ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடலாம். வரவேற்பு அறை அலமாரியின் மேல் பக்கத்தில் யார் கைக்கும் எட்டாமல் வைத்தாலும் சரி தான். 15 லிருந்து 20 நாட்கள் இந்த இரண்டு செடியும் உங்களுடைய வீட்டில் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு பழையதை எடுத்துப் போட்டு விட்டு மீண்டும் புதியதாக கொண்டு வந்து இந்த இரண்டு செடியின் கிளைகளையும் வீட்டில் ஒன்றாக வைக்க வேண்டும்.

இப்படி செய்தால் உங்களுடைய துரதிஷ்ட காலத்தில் கூட உங்களுக்கு வரும் கஷ்டம் பெரியதாக பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த இரண்டு செடிக்கும் மருத்துவ குணம் எவ்வளவு அதிகம் இருக்கிறதோ, அதே அளவுக்கு மகத்துவமும் நிறைந்து என்று சொல்லப்பட்டு உள்ளது. இது ஒரு சின்ன தாந்திரிக முறை தான். நம்பிக்கை இருந்தால் இரண்டு சிறிய கிளைகளைக் கொண்டு வந்து ஒன்றா உங்களுடைய வீட்டில் வைத்து தான் பாருங்களேன். என்ன மாற்றம் நிகழ்கிறது என்று.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் 2 பேருக்கும், 3 பேருக்கும் சேர்த்து நேரம் நன்றாக இருக்காது. ஒருவருடைய கஷ்டத்தை என்னவென்று திரும்பி பார்ப்பதற்குள், மற்றவர்களுக்கு பெரிய கஷ்டம் வந்துவிடும். ஒரு சில பேர் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு ஒரே ராசி ஒரே நட்சத்திரமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு கெட்ட நேரம் வந்தால் ஒரு சேர வரும். அந்த நேரத்தில் எல்லா பிரச்சினைகளும் சூழ்ந்து வீடு இருளில் மூழ்கி இருக்கும்.

ஒரு சில வீடுகளில் ஒருத்தருக்கு ஏழரைச்சனி நடக்கும். ஒருத்தருக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் நடக்காமல் தள்ளிப்போகும். ஒருத்தருக்கு நாக தோஷம் இருக்கும். ஒருத்தருக்கு ஜாதக கட்டத்தில் ராகு-கேது பிரச்சனை இருக்கும். இப்படி ஒரே குடும்பத்தில் எல்லோருக்கும் ஜாதக கட்டத்தில் நிறைய கோளாறுகளை இருந்தால் அந்த வீட்டின் பிரச்சினைக்கு பஞ்சமிருக்காது. இப்படிப் பட்டவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

- Advertisement -