இந்த தூபம் போடும் வீட்டில் சகலமும் வசியமாகி நீங்கள் வேண்டுவது எல்லாம் தடையில்லாமல் உங்களை வந்து சேரும். சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் தெய்வீக தூபம்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் சாம்பிராணி தூபம் போட்டு வீட்டை மங்களகரமாக மாற்றுவது வழக்கம். இந்த சாம்பிராணி தூபம் போடும் முறை சித்தர்கள் வாயிலாக தெரிய வந்து நம் முன்னோர்கள் கடைப்பிடித்து இன்று வரை நாமும் கடைபிடித்து வரும் அற்புதமான முறை. இந்த தூப முறையானது மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் நிரந்தரமாக தங்க வைக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த தூபமானது தெய்வத்தை மகிழ்விப்பதற்காக மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் அறவே நீக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு. அப்படியான இந்த தூப முறையில் சில பொருட்களை சேர்த்து போடும் போது நம் இல்லத்தில் சகலமும் வசியமாகி, சகலரும் வசியமாகி எல்லா வித நன்மையும் தேடி வந்து ஐஸ்வர்யங்கள் கிடைக்க வழி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும் தூப முறை:
இந்த தூபம் போடுவதற்கு முதலில் சில பொருட்களை நாம் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ள வேண்டும். அது சாம்பிராணி,வெண்கடுகு, நாய் கடுகு, தேவதாரு கட்டை, சந்தன கட்டை, அகில், முகில், மருதாணி விதை, ஜவ்வாது பொடி, கஸ்தூரி மஞ்சள். இவற்றையெல்லாம் வாங்கி பொடி வகைகளை தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கட்டை வகைகளை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தூபத்தை தினமும் காலை 6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு வீட்டின் நிலை வாசலில் வைத்து இந்த தூபத்தை போட ஆரம்பிக்க வேண்டும். அதாவது இந்த கட்டை வகைகளை எல்லாம் சுற்றி வைத்து விட்டு தீ மூட்டி புகை வந்த பிறகு இந்த பொடி வகைகளை தூவி தூபத்தை வளர்க்க வேண்டும்.

- Advertisement -

இந்த தூபத்தை உங்கள் வீட்டில் அனைத்து இடங்களிலும் பரவும் படி போட வேண்டும். வீட்டில் ஒரு இடம் கூட விடாமல் அனைத்து இடங்களிலும் போட வேண்டியது முக்கியம். ஏனெனில் ஏதாவது ஒரு இடத்தில் போடாமல் விட்டு விட்டால் மற்ற இடங்களில் உள்ள எதிர்மறை சக்திகள் அந்த இடத்தில் தங்கி விடும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த தூபத்தை வீட்டில் அனைத்து இடங்களிலும் (கழிவறை உட்பட) போட வேண்டும்.

அதே போல் மாலை ஆறு மணிக்கு இந்த தூபத்தை போட வேண்டும். காலை மாலை இரு நேரமும் தொடர்ந்து இந்த தூபத்தை போட்டு வரும் போது நம்முடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நீங்கி தெய்வம் நடமாட்டம் அதிகமாகி வீட்டில் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்கும். அதுமட்டுமின்றி இந்த தூபம் போடும் இடத்தில் நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் வெற்றியாகும். நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் எல்லாம் ஜெயமாகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பொடி வகைகள் போட்டு வைக்கும் டப்பாவில் ஒரு சிறிய தர்ப்பையை போட்டு வைத்து விடுங்கள். தூபம் போடும் போது தர்ப்பை தனியாக எடுத்து விட வேண்டும். இந்த தூபமுறையை தொடர்ந்து போட்டு வரும் போது உங்களுடைய காரியங்கள் அனைத்தும் சித்தியாகி வேண்டுவன எல்லாம் உங்களுக்கு கிடைத்து வாழ்க்கையில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத நல்ல நிலையை அடைய இந்த சாம்பிராணி தூபம் முறை வழி செய்யும்.

இதையும் படிக்கலாமே: சனிக்கிழமையில் ஒரே 1 எலுமிச்சை பழத்தை இப்படி செய்யுங்கள், உங்களை பிடித்த பீடை எல்லாம் ஒழியும்!

சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடிய இந்த தூப வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் உங்கள் இல்லங்களில் இதை கடைப்பிடிக்கலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -