நாளை மூன்றாம் பிறை தரிசனத்தின் போது, பணத்தைப் பெட்டியில் இப்படி வையுங்கள். நீங்கள் வைக்கக்கூடிய அந்தப் பணம் பல மடங்காக பெருகி உங்களை பணக்காரராக மாற்றும்.

pirai
- Advertisement -

நாளை மூன்றாம் பிறை தரிசனம். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க, குழந்தைகள் திறமையாக செயல்பட, மூன்றாம் பிறை தரிசனத்தை எப்படி காண்பது என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. நாளை மாலை 6.30 மணிக்கு மேலாக சந்திரபகவான் நமக்கு காட்சி கொடுப்பார். நிறைய நேரம் இந்த பிறை தரிசனம் கிடைக்காது. பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை மட்டுமே நம்மால் இந்த பிறை தரிசனத்தை காண முடியும். மாதம்தோறும் பிறை தரிசனம் காண்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரிந்திருக்கும்.

நாளை புதன்கிழமையோடு சேர்ந்து பிறை தரிசனம் வந்திருப்பதால் உங்களுடைய குழந்தைகளுக்கு கட்டாயமாக பிறை தரிசனத்தை காண்பியுங்கள். ஞாபக சக்தி குறைவான குழந்தைகள், புத்திக்கூர்மை குறைவான குழந்தைகள், கொஞ்சம் சோம்பேறித்தனத்துடன் செயல்படும் குழந்தைகள் எல்லாம் நாளைய தினம் சந்திர தரிசனத்தை பார்க்கும்போது அவர்களுக்கு உத்வேகம் பிறக்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும். அறிவாற்றலோடு திறமையோடு செயல்பட நாளைய பிறை தரிசனம் குழந்தைகளுக்கு நிறைய ஆசீர்வாதங்களை கொடுக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக பணப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாளைய தினம் பிறை தரிசனத்தை எப்படி செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டில் உங்களுடைய சேமிப்பு தொகை எதுவாக இருக்கட்டும் 10 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை எவ்வளவு தொகையை உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொள்ள முடியுமோ அந்த தொகையை வைத்துக்கொண்டு பிறை தரிசனத்தை காணுங்கள்.

வெட்டவெளியாக இருக்கக்கூடிய மொட்டைமாடி கொல்லைப்புறம் அல்லது பால்கணி இப்படிப்பட்ட இடங்களில் பிறை தரிசனம் கிடைக்கும் இடமாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு அதற்குள்ளே பணத்தை வைத்துக் கொண்டு, சந்திர பகவானை முழுமனதோடு பிரார்த்தனை செய்து இந்த பணம் பல மடங்காக பெருக நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து ‘ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து பிறகு இந்த பணத்தைக் கொண்டு போய் உங்களுடைய பீரோவில் வைக்க வேண்டும்.

- Advertisement -

கைகளில் பணத்தை வைத்துக் கொண்டு மூடி விடாதீர்கள். இரண்டு கைகளையும் ஏந்தி கொண்டு நடுவில் பணத்தை வைத்துக் கொண்டு, சந்திர பகவானின் தரிசனத்தை அந்த பணத்திற்கு காண்பிக்க வேண்டும். இந்தப் பணத்தை அப்படியே பத்திரப்படுத்தி பீரோவில் வைக்கும்போது பணம் பல மடங்கு பெருகும். (அதற்காக வெட்டவெளியில் நிறைய பணத்தை கொண்டு போய் எங்கேயாவது தொலைத்து விடாதீர்கள் ஜாக்கிரதை. பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்டாலும் போதும்.)

இதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இருந்தும் நிறைய சம்பாதிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள், தொழிலில் லாபம் வராமல் கஷ்டப்படுபவர்கள் எல்லாம் உங்களுடையகஷ்டங்கள் தீர வேண்டுமென்று ஒரு ரூபாய் நாணயத்தை உள்ளங்கைகளில் வைத்து சந்திர பகவானை வேண்டிக் கொண்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு கிண்ணத்தில் டப்பாவில் போட்டு திறந்தபடி கல்லாப் பெட்டியில் வைத்தால் வருமானம் நிச்சயம் பெருகும். வேலைவாய்ப்பு தேடி போகும் போது இந்த ஒரு ரூபாயை கையில் எடுத்துச் செல்லலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டு முறையை மூன்றாம் பிறை அன்று மேற்கொண்டு நல்ல பலனை பெற அந்த எம்பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -