வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு

pirainila
- Advertisement -

மீள முடியாத கடன் பிரச்சனை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை தரைமட்டம் ஆக்கிவிடும். மீள முடியாத பண பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் இன்றைய தினம் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்று மூன்றாம் பிறை தரிசனம். பிறை தரிசனத்தை பார்த்தால் பிறவி பாவமும் தீரும் என்று சொல்லுவார்கள்.

அந்த வகையில் நீங்கள் செய்த பாவம் தீர்வும், வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபடவும், இன்றைய நாள் சந்திர பகவானை பார்க்கும்போது எந்த பொருளை கையில் வைத்துக் கொண்டு வேண்டணும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பிறைநிலா தரிசன வழிபாடு

இன்று வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம். இந்த பிறை தரிசனத்தை சுக்கிர பிறை தரிசனம் என்று சொல்லலாம். இன்று மாலை ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மொச்சைக்கொட்டை எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கிர பகவானுக்கு உரிய தானியம் இந்த வெள்ளை மொச்சை. சந்திர பகவான் உதிக்கும் திசை மேற்கு.

மேற்குப் பக்கமாக நின்று கொண்டு இரண்டு கைகளையும் ஏந்தியபடி வைத்துக் கொண்டு, உள்ளங்கையில் மொச்சை கொட்டையை வைத்துக்கொண்டு, சந்திர பகவானே, சுக்கிர பகவானே, எனக்கு இருக்கும் பண பிரச்சனையை தீர்த்து வை. கடன் சுமையை குறைத்து விடு, என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கையில் வைத்திருக்கும் மொச்சை கொட்டையை அப்படியே ஒரு வெள்ளை துணியில் வைத்து, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை கையோடு கொண்டு போய் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த மொச்சைக்கொட்டையில் சந்திர பகவானின் அருள் ஆசியும், அந்த சுக்கிர பகவானின் அருள் ஆசியும் முழுமையாக நிறைந்திருக்கும்.

பஞ்சாங்கத்தின்படி இன்று 12-01-2024 வெள்ளிக்கிழமை மாலை 5.43 மணியிலிருந்து மாலை 6.35 வரை பிறை நிலா உதிக்கும் நேரமாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நேரத்தில் மேல் சொன்ன பரிகாரத்தை செய்வது முழு பலனையும் நமக்கு கொடுக்கும். முடியாதவர்கள் இன்று இரவு 8.00 மணியிலிருந்து 9.00 மணி வரை சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இந்த நேரத்தில் பிறை நிலா தெரிவது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பிறை நிலவை தரிசனம் செய்ய முடியும். பிறை நிலா தெரிந்தாலும் சரி, தெரியவில்லை என்றாலும் சரி, வெட்ட வெளியாக இருக்கும் இடத்தில், மேற்கு பார்த்த திசையில் நின்று, மேல் சொன்ன நேரத்தில் முறைப்படி இந்த பரிகாரத்தை இன்று செய்யும் பட்சத்தில், உங்கள் பண பிரச்சனைக்கு ஏதாவது ஒரு வகையில் இந்த பிரபஞ்சம் மூலம் தீர்வு கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு உங்கள் பண பிரச்சனைக்கு ஒரு விடுதலையை தரும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -