நீங்கள் செய்த எல்லா பாவத்திற்கும் பிராயச்சித்தம் கிடைக்கும். இந்த ஒரு நாளில், இந்த 1 மணி நேரத்தில், மௌன விரதம் இருந்தால்!

durgai-viratham
- Advertisement -

பாவத்தைப் போக்குவதற்கு நீங்கள் செய்யக் கூடிய பரிகாரங்களோடு, இருக்கக்கூடிய விரதத்தோடு சேர்த்து, இந்த ஒருநாளில், ‘மௌன விரதத்தையும்’ கொஞ்சம் இருந்து தான் பாருங்களேன்! பொதுவாக இதை பரிகாரம் என்று சொல்லுவதை விட, பிராயச்சித்தம் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். ஏனென்றால், கொஞ்ச நேரம் நாம் பேசாமல் மௌனமாக இருந்தால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகளில் பாதி குறைந்து விடும். மௌனவிரதம் இருப்பதில் இரண்டு நன்மைகள் நமக்கு நடக்கின்றது. ஒன்று, செய்த பாவத்திற்கான கணக்குகள் குறையும். புதியதாக அந்த சமயத்தில் நாம் பேசி வரக்கூடிய பாவங்களை வர விடாமல் தடுக்கும். பார்த்துக் கொள்ளுங்கள்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம். எல்லாத்தை விட சிறப்பான விரதம் இந்த மௌன விரதம் தான்.

rudratcham-thiyanam

முடிந்தால் டெய்லி ஒரு மணி நேரம் மௌனம் விரதம் இருங்க! நம்முடைய ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆன்மீக ரீதியாகவும் நல்லது. அடுத்தவர்களிடம் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் நல்லது. சரி பதிவுக்கு சென்று விடலாமா?

- Advertisement -

பொதுவாகவே ராகு கால நேரத்தில் துர்க்கை வழிபாடு நமக்கு பல நன்மைகளை தரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி, நாமும் வழிபாட்டு முறையை செய்து பலனை அடைந்து, ராகுகால வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிந்திருப்போம். ராகு காலம் என்றால் அந்த ராகு கால சமயத்தில் பிரத்தியங்கிராதேவி, சரபேஸ்வரர், வராஹி அம்மன், பைரவர் இப்படிப்பட்ட தெய்வங்களுக்கு ஒரே ஒரு மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றினால் கூட அதன் மூலம் நமக்கான பாவங்கள் குறைக்கப்பட்டு நல்ல பலனை பெற முடியும்.

sarabeswar 3

இதோடு சேர்த்து உக்ர தெய்வங்களான, இப்படிப்பட்ட பெண் தெய்வங்களின் கோவில்களுக்குச் செல்லும்போது, குங்குமம் வாங்கி கொடுத்து அந்த தெய்வங்களுக்கு குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை மீண்டும் பெற்று நம் வீட்டிற்கு கொண்டு வந்து, தினம் தோறும், பெண்கள் அந்த குங்குமத்தை தங்களுடைய நெற்றியில் இட்டுக் கொள்வது ரொம்ப ரொம்ப விசேஷம் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்தபடியாக, தினமும் வரக்கூடிய ராகுகால நேரம் என்பது 1 1/2 மணி நேரம். இந்த ஒன்றரை மணி நேரத்தில் பொதுவாகவே யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த ராகு கால வேளையில் நாம் என்ன நினைக்கின்றோமோ, நாம் என்ன பேசுகின்றோமோ, அது பலிதம் ஆகும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை.

durga

ராகு கால வேளையில் தானே தீராத கட்டத்திற்கான வேண்டுதலை துர்க்கை அம்மனிடம் வைத்து, பிரார்த்தனை செய்கின்றோம். அந்த சமயத்தில் நாம் வைக்கும் வேண்டுதல் விரைவாக பலிக்குதா? இல்லையா? முடிந்தவரை இந்த ராகு கால சமயத்தில் கெட்ட வார்த்தைகளையும் அடுத்தவர்களுக்கு திட்ட எதிர்மறை எண்ணங்களையும் உங்களுடைய மனதிற்குள் கொண்டு வரவே கூடாது.

- Advertisement -

mantra-thiyanam

நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, இந்த ராகுகால சமயத்தில் மௌன விரதம் இருப்பது மிகவும் நல்லது. வெளியில் சென்று வேலைக்கு செல்பவர்களுக்கு இது சாத்தியமில்லை. இருப்பினும், அந்த ராகு கால சமயத்தில் அனாவசியமான பேச்சை தவிர்த்துக் கொள்ளலாம். அந்த சமயத்தில் அம்மன்களின் பெயரையோ அல்லது ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தையும் மனதிற்குள் உச்சரித்துக் கொள்வது நமக்கு பல நன்மையை தேடித்தரும்.

mantra sign

நீங்கள் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தால் உங்களுடைய பாவங்களை குறைப்பதற்கும் இந்த ஒன்றரை மணி நேரம், முடிந்தால் மௌன விரதம் இருக்கலாம். அது உங்கள் வசதியை பொருத்தது. மௌன விரதம் இருக்கும் பெண்களுக்கு கட்டாயம் நல்ல பலன் உண்டு என்பது மட்டும் உறுதி. (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் மட்டுமாவது இந்த மௌன விரதத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.)

siva-parvathi

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் வந்தால், அந்த ஞாயிற்றுக் கிழமையில் 4.30 யிலிருத்து 6 மணி வரை ராகு காலமாகும். அந்த தினத்தில் பிரதோஷ காலமும் சேர்ந்து வரும் பட்சத்தில், அந்த 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் மௌன விரதம் இருந்து, எந்த வேண்டுதலை எம்பெருமான் இடமும், சக்திதேவி இடமும் வேண்டி கேட்டுக் கொண்டால், உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் பலிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 மணி நேரத்தில் இப்படி விளக்கேற்றினால் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றிய பலன் கிடைக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -