மௌனம் பழகு! மௌனமாக இருப்பதால் இவ்வளவு அதிர்ஷ்டம் வருமா? இது தெரிஞ்சிருந்தா பேசாம சும்மா இருந்திருப்பேனே!

silent-lakshmi
- Advertisement -

மௌனமாக இருப்பது என்பது எப்பேர்பட்ட நற்பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது தெரியுமா? இதனால் தான் சாஸ்திரங்கள் மௌன விரதத்தை கடைபிடிக்க சொல்லி அறிவுறுத்தின. மௌனம் பழகினால் கிடைக்கக் கூடிய அதிர்ஷ்டங்களும், நன்மைகளும் என்னென்ன? என்கிற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி அறிந்து கொள்ள போகிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மௌனம் பழகினால் அல்லது மௌன விரதம் இருந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் நமக்கு கிடைக்குமாம். அனைத்து கடவுளர்களின் ஆசியும் கிடைக்க வாரம் ஒரு முறை மௌன விரதம் கடைபிடிக்க வேண்டுமாம். தொன்றுத்தொட்டு நம்முடைய இந்து சாஸ்திரத்தின்படி பலரும் இந்த மௌன விரதத்தை கடைபிடித்து வந்தனர். ஆனால் இன்று காலப்போக்கில் அவை மாறி போய்விட்டது.

- Advertisement -

மௌன விரதம் மனதையும், நம்முடைய சிந்தனையையும் தூய்மையாக்க கூடிய பெரும் வல்லமை கொண்டது. ஒரு நாள் முழுக்க யாரிடமும் பேசாமல் நம்முடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது முறையாகும். இதனால் மனம் ஒருமை படுகிறது. பலவிதமான கேள்விகளுக்கு மனதிற்கு உள்ளேயே பதிலும் கிடைத்து விடுகிறது.

மௌன விரதம் இல்லாவிட்டாலும் அதிகம் பேசுவதை தவிர்ப்பது தான் ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியது. பேசிக்கொண்டே இருக்கும் ஒருவர் தன்னுடைய எல்லா விஷயங்களையும் வெளியில் கொட்டி தீர்த்து விடுகிறார். இதனால் அவர் பின் நாளில் பலவிதமான பிரச்சனைகளையும் சந்திக்கிறார். ஆனால் குறைவாக பேசும் ஒருவரிடம் இருந்து நாம் எதையுமே வாங்கி விட முடியாது. அவர் பலவிதமான பிரச்சனைகளில் இருந்து தன்னைத்தானே தற்காத்துக் கொள்கிறார். இதைவிட ஒரு அதிர்ஷ்டம் இருக்க முடியுமா?

- Advertisement -

அமைதியாகவோ அல்லது மௌனமாகவோ இருப்பதால் நாம் நிறையவே கற்றுக் கொள்ள முடியும். மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க முடியும். அவர்களைப் பற்றி உணர முடியும். இவ்வுலகம் முழுவதும் சப்தங்களால் நிறைந்தவையாக இருக்கின்றன. இந்த சப்தங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய பிரபஞ்ச சக்தியை உணர மனதிற்கு அமைதி தேவை, ஓய்வு தேவை. இதை கொடுப்பது தான் மௌனம்.

இந்த மௌனம் கூர்மையான ஆயுதம் போன்றது. சிலருக்கு நம் பேச்சை கேட்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடும். அப்போது தான் அவர்கள் அதிகம் பேச தொடங்குவார்கள். அவர்களுக்குள் என்ன இருக்கிறது? என்பதை நம்மால் அப்போது தான் தெரிந்து கொள்ள முடியும். நாம் பேசிக் கொண்டே இருப்பதால் பலருடைய ரகசியங்களையும் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

இதையும் படிக்கலாமே:
விடியா மூஞ்சி, விளங்காதவன் என்ற பட்டப் பெயர் உங்களுக்கு உள்ளதா? தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இதை போடுங்கள். நீங்களும் அதிர்ஷ்டசாலிகள் தான் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்கலாம்.

அதைப் போலவே மௌனம் விரதம் கடைபிடிப்பதால் இந்த பிரபஞ்சத்தின் உடைய ரகசியத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இந்த பிரபஞ்சத்தில் நாம் இதுவரை சொல்லியதெல்லாம், பேசியதெல்லாம் வீணானதே.. என்கிற உண்மையை புரிந்து கொள்ள முடியும். உங்களை உணர முடியும், கடவுளுடைய சக்தியை காதினால் கேட்க முடியும். பேசி பேசி நீங்கள் இதுவரை எதை சாதித்து இருக்கிறீர்கள்? எதுவுமே கிடையாது! மௌனமாக இருந்து பாருங்கள், நீங்கள் சாதிப்பது இந்த பிரபஞ்சத்தை என்பதை உணரலாம். மௌனம் பழகிப் பாருங்கள், நீங்கள் அடையப் போவது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மௌன விரதத்தை கடைபிடித்து பாருங்கள், கடவுள் நமக்கு கொடுக்கும் வரங்களை அறியலாம்.

- Advertisement -