விடியா மூஞ்சி, விளங்காதவன் என்ற பட்டப் பெயர் உங்களுக்கு உள்ளதா? தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இதை போடுங்கள். நீங்களும் அதிர்ஷ்டசாலிகள் தான் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்கலாம்.

bathing
- Advertisement -

நாம் ஏரோப்ளேனில் போனால், நம் கெட்ட நேரமும் தரித்திரமும் ஜெட் வேகத்தில் போய் நமக்கு முன்னாடி வேலை பார்க்கும். நாம் எந்த காரியத்தை முன்னால் நின்று செய்தாலும் அது விளங்காது. நம்முடன் நல்ல நட்போடு இருக்கும் நல்லவர்கள் கூட, நம்மை விட்டு விலகி விடுவார்கள். நமக்கு நல்ல வேலை கிடைக்காது. நாம் சென்ற இடத்தில் கூட சண்டை சச்சரவு வந்துவிடும். நம்மை பார்த்தாலே எல்லோரும் பயந்து நடுங்குவார்கள். அதிர்ஷ்டம் கெட்டவன் வந்து விட்டான். இவன் வந்த நேரம், என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்று தெரியவில்லை என்று பின்னால் கூட பேசுவார்கள்.

இப்படிப்பட்ட தரித்திரம் உங்களை சுற்றிக்கொண்டு, துரத்தி துரத்தி அடிக்கிறதா. அதற்கு ஒரு விமோசனம் கிடைக்க எளிமையான பரிகாரம் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நீங்களும் அதிர்ஷ்டசாலிகளாக மாறுவீர்கள்.

- Advertisement -

தரித்திரம் விலக குளிக்கும் முறை:
பச்சைத் தண்ணீரில் குளிப்பது இந்த பரிகாரத்திற்கு நல்லது. உங்களுக்கு பச்சை தண்ணீரில் குளித்தால் ஒத்து வராது என்றால் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் பின் சொல்ல கூடிய பொருட்களை போடுங்கள். கோமியம் ஒரு ஸ்பூன், வசம்பு சக்கை சிறிதளவு, மஞ்சள் கிழங்கு ஒன்று, இந்த பொருட்களை எல்லாம் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்.

நீங்கள் குளிக்க செல்லும் போது இந்த தண்ணீரில் உங்கள் ஆள்காட்டி விரலால் ‘ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை எழுதி விட்டு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். ஸ்ரீம் என்பது மகாலட்சுமியின் பீஜ மந்திரம். இந்த தண்ணீரால் குளித்தால் உங்களுக்கும் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைத்துவிடும். (ஒருமுறை தண்ணீரில் போட்ட பொருளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது அதை எடுத்து செடி கொடிகளுக்கு பக்கத்தில் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்).

- Advertisement -

ஆண்கள் பெண்கள் என்று துரசிஷ்ட சாதிகளாக இருப்பவர்கள் இந்த தண்ணீரில் தொடர்ந்து 48 நாட்கள் குளித்து வந்தால் உங்கள் உடம்பில் இருக்கும் தரித்திரம் விலகும். உங்களை சுற்றி இருக்கும் அந்த கெட்ட ஆற்றல் உங்களை விட்டு விலகி விடும். ராசியே இல்லாதவர்கள் என்று தூற்றப்பட்ட நீங்கள் ராசியானவர்களாக லட்சுமி கடாட்சம் நிறைந்தவர்களாக மாறிவிடுவீர்கள்.

வசம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி நன்றாக கல்லில் போட்டு இடித்து டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு சின்ன துண்டை தண்ணீரில் போட்டுக் கொண்டால் போதும். வசம்பு கிடைக்காதவர்கள் வசம்பு பொடி நாட்டு மருந்து கடைகளில் விற்கும். அதை வாங்கிக்கூட பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். கோமியம் இதில் மிக மிக அவசியமான ஒரு பொருள். கோமியம் இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்தால் பலன் கொடுக்காது.

இதையும் படிக்கலாமே: எட்டுத்திக்கும் தேடி அலைந்தாலும் கிடைக்காத அற்புதமான பலனை பெற இந்த ஒரு இலை போதும். ஆண்டியையும் அரசனாக மாற்றி குபேர வாழ்க்கை வாழ வைக்கும் இலை தீபம்.

48 நாட்கள் தொடர்ந்து இதை செய்து பாருங்கள். பிறகு உங்களைப் பார்த்தாலே எல்லோருக்கும் பிடிக்கும். நீங்கள் சென்ற இடமெல்லாம் செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களிடம் நட்பு வைத்துக் கொள்ளவே 4 பேர் உங்கள் பின்னால் சுற்றுவார்கள். அந்த அளவுக்கு நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாறிவிடுவீர்கள். நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நீங்கள் அழகாக மாற மாட்டீர்கள். அதிர்ஷ்டசாலியாக மாறுவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக தேக தரித்திரம் விலகி நன்மை உண்டாகும்.

- Advertisement -