ஒரு முடி கொட்டிய இடத்தில் 10 முடியை வளரச் செய்ய இந்த எண்ணெயை தலையில் தேய்த்தாலே போதும். பிறகு உங்களுடைய முடி அடர்த்தியை இரண்டு கைகளால் பிடிக்க முடியாது.

hair tips
- Advertisement -

அடர்த்தியான முடி கடகடவென வளர்ந்தால் யாருக்குத்தான் ஆசையாக இருக்காது. ஆனால் இந்த காலத்தில் முடி கொத்துக்கொத்தாக கொட்டுகிறதே தவிர, உதிர்ந்த இடத்தில் முடியை வளர வைப்பது குதிரை கொம்பான விஷயமாக இருக்கிறது. உங்களுடைய தலை முடியை வளரச் செய்ய ஸ்கேல்பை சுத்தம் செய்ய இரண்டு அற்புதமான குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சில பேருக்கு என்ன தான் எண்ணெயை தலையில் தேய்த்தாலும், என்னதான் சாம்பு சீயக்காய் போட்டு தலைக்கு குளித்தாலும், தலை முடி வளரவே வளராது. அதற்கு காரணம் அவர்களுடைய ஸ்கேல்பில் இருக்கும் இன்பெக்சன், முடி வளர்ச்சியை தடுத்துவிடும். தலைமுடி வளர்வதை தடுக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய ஒரு சூப்பர் வழி, இன்ஃபெக்ஷன் நீங்கிய பின்பு, தலைமுடி வளர்க்கவும் ஒரு சூப்பர் ஐடியா இதோ உங்களுக்காக.

சுலபமாக தலை முடியை வளர்க்க எண்ணெய் தயார் செய்யும் முறை:
இந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, முதலில் நம்முடைய ஸ்கால்ப்பை சுத்தம் செய்ய ஒரு வழியை பார்ப்போம். பூவம் பழம், மஞ்சள் வாழைப்பழம் என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த பழத்தை எடுத்துக் கொள்ளவும். அது நன்றாக பழுத்த வாழைப்பழமாக இருக்க வேண்டும். அதை எடுத்து உங்கள் கையாலேயே நன்றாக மசித்து குழைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வாழைப்பழத்தை ஸ்கேல்பில் படும்படி நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து உங்களுடைய தலையை ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசி விடுங்கள்‌. வாரம் ஒரு முறை இந்த வாழைப்பழத்தை தலையில் போட்டு குளித்து வர உங்கள் ஸ்கேல்பில் முடி வளர்ச்சியை தடுக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு அடுத்த வாரம் இந்த எண்ணெயை தலையில் தேய்த்து வரலாம். நல்லெண்ணெய் 250ml எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கார்போக அரிசி 1 கைப்பிடி, மருதாணி இலை 10, வெந்தயம் 3 டேபிள் ஸ்பூன், போட்டு அப்படியே வெயிலில் காய வையுங்கள். மூன்று நாள் நல்ல வெயிலில் காய வைத்தால் கூட போதும். அந்த மூன்று பொருட்களில் இருக்கும் சத்தும் எண்ணெயில் இறக்கி விடும். வெயில் இல்லாதவர்கள் இந்த பொருட்களை எல்லாம் போட்டு எண்ணெயை டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த எண்ணெயை நம்முடைய தலைக்கு எப்படி பயன்படுத்துவது. வாரம் இரண்டு நாள் தலைக்கு குளிப்பதற்கு முன்பு 1 மணி நேரம் இந்த எண்ணெயை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து ஊர விட்டு பிறகு எப்போதும் போல தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். சூப்பரான முடி வளர்ச்சி கத்தை கத்தையாக கிடைக்கும். (வாரத்தில் ஒரு நாள் பழுத்த வாழைப்பழம் தலையில் போடுங்கள். அடுத்த வாரம் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்யுங்கள். இப்படி மாற்றி மாற்றி இந்த குறிப்பை பின்பற்றி வரலாம்.)

இதையும் படிக்கலாமே: அடர்த்தியான அழகான முடி வளர்ச்சிக்கு இனி எந்த கஷ்டமுமே பட வேண்டாம். இந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே, முடி அது பாட்டுக்கு வளர்ந்து செல்லும்.

முடி வளர்ப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம் அல்ல. சுலபமான விஷயம்தான். ஆனால் அதற்கான வழிமுறைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். முடியின் மீது கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு பழக்கத்திலும் கொஞ்சம் அக்கறை காட்ட நம்முடைய முடி சுலபமாக தானாக வளரும். மேலே சொன்ன அழகு குறிப்பு ஆர்வம் உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -