முடி கரு கருவென்று நீண்டு சுருண்டு முழங்காலுக்கு கீழே வளர வேண்டுமானால், இதை மட்டும் செய்யாமல் இருந்தாலே போதும், உங்கள் முடி முழங்காலை என்ன? தரையை தொடும் அளவிற்கே வளரும்.

- Advertisement -

தலைமுடி நீண்டு சுருண்டு வளர்வதை விரும்பாத பெண்களே இல்லை. ஆனால் அப்படி வளர நாம் செய்யும் சில தவறுகள் முடி வளர்ச்சியை வேரோடு தடுத்து விடும் என்பதை பலரும் அறிவதில்லை. முடி வளர எதை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வத்தில், எதை பயன்படுத்தக்கூடாது என்பதிலும் சிறிது கவனம் செலுத்தினால் போதும் முடியின் வளர்ச்சியை பல மடங்கு அதிகரித்து விடலாம். இந்த முடி உதிர்வு நாம் செய்யும் சில தவறுகள் என்ன என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மருதாணி இலைகளை எப்போதும் பறித்த உடனே பயன்படுத்தக் கூடாது. அதை பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதன் பிறகு தான் முடிக்கு பயன்படுத்த வேண்டும். இந்த இலைகளை பறித்த உடனே அப்படியே அரைத்து சேர்க்கும் போது இது தலையில் உள்ள ஈரப்பதங்களை உறிஞ்சி முடி உதிர்வு காரணமாகி விடும்.

- Advertisement -

அதே போல தலைமுடி ஈரமாக இருக்கும் போது சீப்பு வைத்து வாரக் கூடாது. அப்படி வாரும் போது கட்டாயமாக முடிகள் உடைந்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே போல் தலை முடிக்கு ட்ரையர் அதிகமாக பயன்படுத்தக் கூடாது. 50% வரையாவது நாம் முடியை உலர்த்திய பின்பு தான் ட்ரையர் பயன்படுத்த வேண்டும். அதிக அளவு ட்ரையர் பயன்படுத்துனாலும் முடி உதிர்ந்து விடும்.

தலையில் அதிக அளவு எண்ணெய் வைப்பதாலும் முடி உதிர்வு அதிகரிக்கும். முடியின் வேர்க்கால்களில் படும் படி லேசாக எண்ணெய் தேய்த்து விட்டால் போதும். முடியில் அதிக அளவு எண்ணெய் இருந்தால் இருந்தால் அதிகமாக அழுக்கு சேர்ந்து முடி உதிர ஆரம்பிக்கும். உடல் உஷ்ணத்திற்கு எண்ணெய் தேய்பதாக இருந்தாலும் தேய்த்த சில மணி நேரத்தில் தலைக்கு குளித்து விடுவது நல்லது.

- Advertisement -

முடிக்கு எப்போதும் சீயக்காய் பயன்படுத்துவதே சிறந்தது. சீயக்காய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஷாம்புவை பயன்படுத்தும் போது அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பு பயன்படுத்தினால் முடியின் போசாக்கு அதிகம் வீணாக்காமல் முடி நன்றாக வளரும்.

பெரும்பாலானோர் செய்யும் தவறு முடி வளர்ச்சிக்காக வெங்காயம் பயன்படுத்துவார்கள். அதை நேரடியாக அரைத்து அப்படியே முடியில் தேய்க்கும் போது, அதில் இருக்கும் அதிக அளவு சல்பர் சத்து முடியின் வளர்ச்சிக்கு பதிலாக முடி உதிரவே காரணமாகி விடும் . முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் எந்த பொருளையும் நேரடியாக உபயோகிக்காமல் அதை அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இது தான் அதற்கான சரியான முறையும் கூட.

- Advertisement -

இப்போது பிரபலமாக பரவி வரும் இந்த கலரிங் கலாச்சாரத்தினாலும் முடிகள் பெருமளவு பாதிக்கிறது. இந்த கலரிங் வெள்ளை முடி கருமையாக பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, அல்லது வேறு நிறங்களுக்கு முடியை மாற்றுவதாக இருந்தாலும் சரி, இது போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை முடிக்கு அடிக்கடி பயன்படுத்தாமல், எப்போதாவது மட்டும் பயன்படுத்தினால் நல்லது. இது முடியின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.

இதையும் படிக்கலாமே: இது ஒண்ணு மட்டும் உங்க கையில இருந்தா உங்களுக்கு வயசே ஆகாது, அப்புறம் உங்கள பார்க்கிறவங்க, எப்படி இன்னும் இவ்வளவு இளமையா இருக்கீங்கன்னு ஆச்சர்யமா கேட்பாங்க.

முடி வளர்ச்சிக்கு முடி உதிர்வுக்கும் காரணமான ஒரு சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதன் நன்மை தீமைகளை உணர்ந்து உங்கள் முடியை நல்ல முறையில் பராமரித்தல் நல்ல நீண்ட கரு கரு கூந்தலை நிச்சயமாக பெறலாம்.

- Advertisement -