பொடுகு நீங்கி தலைமுடி வேர்க்காலில் இருந்தே புதிதாக முளைக்க இந்த 3 பொருள் இருந்தால் போதுமே! 4 வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -

இன்று இருக்கும் பலருக்கும் தலை முடி உதிர்வது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சாதாரணமாக இருக்கக்கூடிய இந்த பொடுகு மற்றும் தலைமுடி உதிர்தல் பிரச்சனை ரொம்ப எளிதாக இந்த 3 பொருட்கள் வைத்து எப்படி தீர்வு காண்பது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு மிக சிறந்த தீர்வாக இருக்கக் கூடியது தேங்காய் பால்! தேங்காய் பாலில் இருக்கக் கூடிய நுண் சத்துக்கள் அனைத்தும் தலைமுடியை வேரில் இருந்தே ஊக்குவித்து புதிதாக வளர செய்யும். சொட்டை தலையில் கூட முடியை முளைக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் இதற்கு உண்டு. இதனுடன் ரெண்டு கூடுதல் பொருட்களை சேர்த்து பேக் போடும் பொழுது நான்கே வாரத்தில் இழந்த முடியை மீண்டும் அடையலாம்.

- Advertisement -

இதற்கு முதலில் முந்தைய நாளே ஒரு டீஸ்பூன் அளவிற்கு ஆளி விதையை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மறுநாள் காலையில் எழுந்ததும் குளிக்கப் போகும் அரை மணி நேரத்திற்கு முன்பு அரை கப் அளவிற்கு தேங்காய் பாலை கெட்டியாக மிக்ஸர் ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஊற வைத்துள்ள ஆளி விதையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் இதில் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதை அப்படியே தலை முழுவதும் மசாஜ் செய்தபடி தடவி விடுங்கள். உச்சந்தலை முதல் நுனி வரை எல்லா இடங்களிலும் தடவிய பின்பு கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாலிதீன் கவர் போட்டு மூடி வைத்து அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். இதில் குளிர்ச்சி தரக்கூடிய எந்த பொருளும் சேர்க்கப்படவில்லை எனவே உங்களுக்கு சளி தொந்தரவு ஏற்படாது.

- Advertisement -

அரை மணி நேரம் நன்கு ஊறியதும் பிறகு சாதாரணமாக நீங்கள் எப்பொழுதும் ஷாம்பூ போட்டு அலசுவது போல தலை முடியை அலசிக் கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால் நாலு வாரத்தில் முடி இழப்பை தடுத்து நிறுத்தி விடும். இதனால் புதிதாக வேரிலிருந்து முடி உதிராமல் தடுக்கும். ஸ்கால்ப் பகுதி நல்ல வலுவான முடியை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் புதிதாக முடி வளர தூண்டும். பொடுகு தொந்தரவும் இருக்காது. பொடுகு, ஈறு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அவைகள் முற்றிலுமாக நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
இனி ஒரு முடி கூட கொட்டாது. வாரத்தில் 1 நாள் மட்டும் இந்த ஹேர் பேக் போடுங்க போதும்.

மீண்டும் இழந்த இடத்திலிருந்து முடி வளர்வதால் அடர்த்தியாகவும் வளர துவங்கும். கருகருவென்று அலைபாயும் கூந்தலை நீங்கள் இனி சுலபமாக பெற்று விடலாம். தேங்காய் பால், ஆளி விதை, முட்டையின் வெள்ளை கரு இந்த மூன்று பொருட்களை வைத்து தயாரிக்கும் இந்த அற்புதமான பேக் நாலு வாரத்தில் உங்களுக்கு அதன் அருமையை உணர்த்தும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுடைய தலைமுடியும் இனி மெலிந்து போகாமல் அடர்த்தியாக, ஆரோக்கியமாக வளரும்.

- Advertisement -