வெறும் பத்து ரூபாய்க்கு நெல்லிக்காய் வாங்கி இப்படி பயன்படுத்தி பாருங்க. ஒரு முடி கூட உதிராமல் நல்ல கரு கருவென்று நீண்டு வளரும். அப்புறம் இனி முடி உதிர்வு பிரச்சனைக்கு குட்பை சொல்ல வேண்டியது தானே.

nellikai hari pack
- Advertisement -

இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் எண்ணிலடங்கா பிரச்சனைகளில் இந்த முடி சார்ந்த பிரச்சனை என்பது மிகவும் அதிகமாகவே இருக்கிறது. ஒரு சிலருக்கு முடி உதிர்வு இருக்கும், சிலருக்கு இளநரை, பொடுகு, முடி வளர்ச்சி குறைவு என முடி தொடர்பான பிரச்சனை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாக இந்த ஒரு ஹேய் பேக்கை போட்டாலே போதும். அது என்ன என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்வை தடுத்து முடி வளர நெல்லிக்காய் ஹேர் பேக்:
இந்தப் பேக்கை தயாரிப்பதற்கு பத்து ரூபாய் முழு நெல்லிக்காய் வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்றாக நிழலில் உலர்த்தி காய்ந்த பிறகு சின்ன சின்னதாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நெல்லிக்காய் பொடி கடைகளிலும் கிடைக்கும். ஆனால் அப்படி வாங்கி செய்வதை விட, நாமே நெல்லிக்காய் வாங்கி காய வைத்து அரைத்து சேர்க்கும் போது அதில் எந்த வித கெமிக்கலும் இருக்காது.

- Advertisement -

ஒரு பவுலில் அரைத்த நெல்லிக்காய் பொடியில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் சுத்தமான கற்றாழை ஜெல், இத்துடன் ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி அதன் சாறை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் அரை எலுமிச்சை பழத்தின் சாறையும் கலந்த பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து இந்த பேஸ்ட்டை நன்றாக குழைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த பேக்கை உங்கள் முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து அப்படியே அரை மணி நேரம் ஊற விடுங்கள். அதன் பிறகு ஏதேனும் மையில்டான ஷாம்பு அல்லது ஹெர்பல் ஷாம்பூ சீயக்காய் போன்றவற்றால் முடியை அலசி விட்டால் போதும்.

- Advertisement -

இதில் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்துமே முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும். நெல்லிக்காய் முடி வளர கூடிய செல்களை தூண்டக் கூடியது. கற்றாழை முடியின் வறட்சியை நீக்கும். அதே போல் இஞ்சியும் தலையில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும். எலுமிச்சை சாறும் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு போன்றவை எல்லாம் சரி செய்யும். இத்துடன் நாம் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்ப்பதும் முடி வளர்ச்சி தூண்டும்.

இதையும் படிக்கலாமே: கஞ்சி தண்ணி அழகு குறிப்பு

இவையெல்லாம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஹேர் பேக்கை வாரம் இரண்டு முறை நீங்கள் பயன்படுத்தி வரும் போது முடி உதிர்வு, பொடுகு, இளநரை, செம்பட்டை, போன்ற முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி முடி நல்லா கருகருன்னு நீண்டு வளர ஆரம்பிக்கும். இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -