அபரிமிதமான முடி வளர்ச்சிக்கு 4 பல் பூண்டு இருந்தா போதுமே! பாட்டி காலத்து டெக்னிக் இதைவிட வேற எதை தேடணும்?

hair-fall-garlic-poondu
- Advertisement -

முடி உடைதல் பிரச்சனையும், முடி உதிர்தல் பிரச்சனையும் இருப்பவர்கள் கண்ட கண்ட எண்ணெயையும் பயன்படுத்தி, இருக்கின்ற கொஞ்சம் முடியை இழந்து விடுகிறார்கள். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்தே அந்த காலத்தில் பாட்டிமார்கள் கண்டுபிடித்த டெக்னிக் தான் இது! இத ட்ரை பண்ணி பாருங்க, கண்டிப்பா 30 நாட்களில் ஆச்சரியப்படும் ரிசல்ட்டை காணலாம். ஆண், பெண் இருபாலருக்கும் இது தான் முடி வளர்ச்சிக்கு சிறந்த டிப்ஸ்! இதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி அறிந்து கொள்ள போகிறோம்.

உங்கள் முடியை இழக்கும் முன்பு அதை பாதுகாப்பது தான் நல்ல முறையாகும். அப்படி இழந்த முடியை மீண்டும் மீட்டு எடுக்க செயற்கை முறையை கையாளாமல் இயற்கை மூலிகைகளைக் கொண்டு முயற்சிப்பது தான் புத்திசாலித்தனம்! அந்த வகையில் நமக்கு இயற்கையாகவே சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருள் ‘பூண்டு’ ஆகும்.

- Advertisement -

இந்த பூண்டு எல்லோருடைய வீட்டிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தினமும் பூண்டை பாலில் அவித்து தின்பவர்களுக்கு சளி, கபம், இருமல் போன்ற பிரச்சனைகளும் வராது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இத்தகு மருத்துவ மூலிகையாக செயல்படக்கூடிய இந்த பூண்டில் ஏராளமான நற்குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் இருக்கக்கூடிய கால்சியம், ஜிங்க், சல்பர் போன்றவை நம்முடைய முடி வளர்ச்சியை தூண்டி விடக் கூடியதாக இருக்கிறது.

நான்கைந்து பெரிய பூண்டு பற்களை எடுத்து தோல் உரித்து கொள்ளுங்கள். பின்பு அதை ஒன்றிரண்டாக வெட்டி அதில் வரக்கூடிய சாற்றை முடி இழந்த இடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பூண்டை தேய்க்கும் போது அதில் இருந்து வரக்கூடிய எசென்ஸ் தான் தலைமுடி வளர்ச்சிக்கு மிகுந்த ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடியது.

- Advertisement -

வழுக்கை தலை, சொட்டை தலையில் கூட இதை ட்ரை பண்ணி பார்க்கலாம். முடி இழந்த இடத்தில் நன்கு இதனை தடவி ஒரு மணி நேரம் அப்படியே காய விட்டு விட வேண்டும். ஏற்கனவே பூண்டில் பிசுபிசுப்பு தன்மை இருக்கும், எனவே சீக்கிரம் காய்ந்து விடும். நன்கு காய்ந்து ஒரு மணி நேரம் ஆன பிறகு, நீங்கள் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெயுடன் ஒரு மடங்கு விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் மசாஜ் செய்து தடவி விட வேண்டும்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இந்த ரேஷியோவில் சேரும் பொழுது அதில் இருக்கக்கூடிய ரியாக்ஷன் தலைமுடி வளர்ச்சியை அடியில் இருந்தே தூண்டி விடக் கூடிய அற்புதமான ஆற்றல் கொண்டுள்ளது. எனவே ஒரு பத்து நிமிடம் உச்சந்தலையில் மெதுவாக இந்த எண்ணெயை தடவி விரல்களால் அழுத்தம் கொடுக்காமல் லேசாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த டிப்ஸ் தெரிந்தால் வாயை சுற்றி இருக்கும் கருவளையத்தை வெறும் 15 நிமிடத்தில் போக்கிவிடலாம். உங்கள் நெற்றியில் கழுத்தில் கருப்பாக இருந்தால் கூட இந்த டிப்ஸ் பக்காவா வொர்க் அவுட் ஆகுங்க.

பத்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு அப்படியே விட்டு விடுங்கள். நீங்கள் எப்பொழுதும் போல தலையை வாரி பின்னி கொள்ளலாம். பிறகு மறுநாள் காலையில் எழுந்ததும் சாதாரண ஷாம்பு அல்லது இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட மூலிகை சீயக்காய் கொண்டும் தலைக்கு அலசுங்கள். இது போல 30 நாட்களில் ஆறிலிருந்து எட்டு முறை செய்யுங்கள். கண்டிப்பாக பெஸ்ட் ரிசல்ட்டை நீங்கள் காணலாம். இதெல்லாம் அந்த காலத்தில் பாட்டிமார்கள் சொன்னது தான், ஆனால் இப்பொழுது யாருக்கும் தெரிவதில்லை. இதை ட்ரை பண்ணுங்க, வேற எதையுமே தேடாதீங்க, உங்க முடி காடு போல வளரும்.

- Advertisement -