விறுவிறுன்னு வேகமா முடி வளர, விளக்கெண்ணெயோடு இந்த 2 பொருட்களை சேர்த்து தலைக்கு தேய்த்தாலே போதும்.

hair10
- Advertisement -

விலை மலிவாக ஒரு பொருள் சாதாரணமாக கிடைக்கின்றது என்றால் அதனுடைய அருமை பெருமை நமக்கு தெரியவே தெரியாது. பக்கத்தில் இருக்கக்கூடிய நல்ல பொருளை விட்டுவிட்டு ஆன்லைனில் தேடி தேடி நிறைய பொருட்களை வாங்குவோம். அதற்கான செலவும் அதிகமாக தான் செய்வோம். இறுதியாக அதில் கிடைக்கக்கூடிய பலன் என்று பார்த்தால் எதுவுமே இருக்காது. இப்படி அது இது என்று தலை முடியை வளர செய்ய பல வகையான கெமிக்கல் கலந்த பொருட்களை தேடாமல், விளக்கெண்ணெயை வைத்து ஒரு எளிமையான குறிப்பு இதோ உங்களுக்காக.

குறிப்பு 1:
முதலில் 1/2 கப் அளவு தரமாக இருக்கக்கூடிய விளக்கெண்ணெயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதோடு  நெல்லிக்காய் பொடி 1 டேபிள் ஸ்பூன், வெந்தய பொடி 1 டேபிள் ஸ்பூன் இந்த 2 பொடிகளையும் போட்டு கலந்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதன் உள்ளே தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். சுடுதண்ணீரின் மேலே இந்த கிண்ணத்தை வைத்து 15 லிருந்து 20 நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு சூடு செய்யுங்கள்.

- Advertisement -

20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை சுடு தண்ணீரிலிருந்து எடுத்து கீழே வைத்து விட்டு, நன்றாக ஆறவைத்து ஒரு மெல்லிசான காட்டன் துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் திக்காக எண்ணெய் நமக்கு கருப்பு நிறத்தில் கிடைத்திருக்கும். இதை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் 3 நாட்கள் தலையில் இந்த எண்ணெயை வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து எப்போதும் போல தலைக்கு குளித்து விடலாம். அவ்வளவு தான். இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே முடி கருகருவென ஸ்ட்ராங்காக வளர தொடங்கி விடும்.

விளக்கெண்ணெய் அதிக குளிர்ச்சி உடையது தான். ஆனால் இதை டபுள் பாய்லிங் மெதடில் சூடு செய்து இருப்பதால் குளிர்ச்சி தன்மை அவ்வளவாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

குறிப்பு 2:
சில பேருக்கு வளர்ந்த முடியை அழகாக மெயின்டைன் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக கடையில் வாங்கி ஹேஸ்பிரே எல்லாம் பயன்படுத்துவார்கள். அதிலும் கெமிக்கல் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உங்களுடைய வீட்டிலேயே இப்படி ஒரு ஹேர் ஸ்ப்ரே வை தயார் செய்து கொண்டால் அது உங்களுடைய முடிக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் சேர்த்து கொடுக்கும்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஆர்கன் ஆயில் (Argan oil) – 1 டேபிள் ஸ்பூன், ரோஸ் எசன்சியல் ஆயில் – 10 சொட்டு, ரோஸ் வாட்டர் – 1/2 கப், ஊற்றி மூடி போட்டு நன்றாக குலுக்கி விடுங்கள். அவ்வளவு தான். நமக்கு தேவையான ஹேர் ஸ்ப்ரே, ஹேர் பெர்ஃப்யூம் தயார். இதை தலைக்கு குளித்த பின்பு லேசாக ஈரம் இருக்கும் போதும் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். அல்லது தலை நன்றாக காய்ந்த பின்பும் தலைமுடியில் இதை ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். நன்றாக வாசமாகவும் இருக்கும். அதே சமயம் தலைமுடிக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். தலைமுடி ஷைனிங்காக மாறும்.

ஆர்கன் ஆயில் என்பது சரும அழகிற்காகவும் முடியின் அழகிற்காகவும் பயன்படுத்தக்கூடிய ஒரு எண்ணெய். ஆர்கன் மரத்திலிருந்து விளையக்கூடிய ஒரு பழத்தின் கொட்டையில் இருந்து இது எடுக்கப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட கூடிய ஒரு எண்ணெய் வகை தான் இது. இதனுடைய விலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதே அளவிற்கு நல்ல பலனும் உடனடியாக தெரியும். உங்களுக்கு மேல் சொன்ன இரண்டு குறிப்புகள் பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -