ஒரு முடி விழுந்த இடத்தில் உங்களுக்கு 10 முடி கட கடன்னு வளர தொடங்கிடும். இந்த ஹேர் பேக்கை போட்டா.

jeeragam-venthayam-hair
- Advertisement -

முடி உதிர்வதை கட்டுப்படுத்தி, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளரச் செய்து, முடியின் அடர்த்தியை அதிகரிக்க ஒரு சுலபமான ஹேர் பேக்கை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிக செலவு இல்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இந்த ஹேர் பேக்கை தயார் செய்து விடலாம். அடர்த்தியான முடியை பெற, சில்கியான முடியை பெற உங்களுக்கு ஆசையா இருக்கா. அப்ப குறிப்பை படித்து பலன் பெறுங்கள்.

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை இந்த பேக்கை நீங்கள் போடுவதாக இருந்தால், முந்தைய நாள் இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த வெந்தயம் கருஞ்சீரகத்தை தண்ணீரோடு சேர்த்துக் கொள்ளுங்கள். இதோடு ஒரு நெல்லிக்காயை கொட்டையை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி போட்டு, நன்றாக விழுந்து போல அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை ஒரு காட்டன் துணியில் ஒட்டி நன்றாக பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டி எடுத்த இந்த ஹேர் பேக் உடன் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்தால் ஸ்மூத்தான ஒரு ஹேர் பேக் ரெடி.

இந்த ஹேர் பேக்கை தான் தலையில் அப்ளை செய்ய வேண்டும். தலையில் இந்த ஹேர் பேக் போடுவதற்கு முன்பு நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்து விடுங்கள். 1 மணி நேரம் கழித்து இந்த ஹேர் பேக்கை ஸ்கால்பில் படும்படி அப்ளை செய்ய வேண்டும். அதன் பின்பு முடியின் மேல் பக்கத்திலும் நன்றாக அப்ளை செய்துவிட்டு, முடியும் நுனிப்பகுதி வரை இந்த பேக்கை நன்றாக தடவி விட்டு, உங்கள் விரல்களை வைத்து லேசாக ஸ்கால்பை மசாஜ் செய்து கொண்டை கட்டிக் கொள்ளுங்கள். 15 லிருந்து 20 நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட்டால் உங்களுடைய முடியில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். அடர்த்தியானது போல உணர்வு இருக்கும். அதே சமயம் ஷைனிங்காகவும் இருக்கும். முடி உதிர்வது குறைந்திருக்கும்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்தி வர, உங்களுடைய தலையில் புதிய குட்டி குட்டி முடிகள் வளர்ந்திருப்பதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம். கூடிய சீக்கிரம் மெல்லிசாக இருக்கும் உங்களுடைய முடி அடர்த்தியாகவும் மாறிவிடும். மூன்றே மாதத்தில் ரிசல்ட் நிச்சயம் தெரியும். பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள்.

இதோடு சேர்த்து உங்களுடைய உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏதாவது இருக்கிறதா என்பதையும் சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏதாவது பிரச்சனை இருந்தால் அதற்கு தகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர உடல் உபாதைக்கு நிரந்தரமாக மருந்து மாத்திரை சாப்பிடும் போதும் உடல் சூடாகி முடி உதிர்வு ஏற்படும். அதை தடுப்பதற்கு, நீங்கள் இன்னும் சத்து தரும் ஆகாரங்களை நிறைய சேர்க்க வேண்டியதாக இருக்கும். மேலே போடக்கூடிய பேக்கோடு சேர்த்து, சாப்பிடக்கூடிய ஆகாரங்களிலும் கவனம் செலுத்தி வர முடி வளர்ச்சியை சீக்கிரம் அதிகரிக்கலாம் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -